Thursday, November 28, 2013

எக்ஸ்போ 2020 கண்காட்சி நடத்த துபாய் தேர்வுக்கு அதிரையர்கள் கலிஃபாவை சந்தித்து வாழ்த்து [ புகைப்படங்கள் ] !

2020ம் ஆண்டுக்கான உலக வர்த்தக எக்ஸ்போ கண்காட்சி நடத்துவதற்கு துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அமீரகத்தில் வசிக்கும் மக்கள் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அமீரக வாழ் அதிரையர் பலர் மகிழ்ச்சிகளை சக நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.

இதில் நெசவுத்தெரு அமீரக அமைப்பின் பொருளாளர் N. முஹம்மது தாஹா, அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் செயலாளார்  N.K.M. நூர் முஹம்மது ஆகியோர் சேக் கலிஃபா [ In charge of Ministry of Environment &Water Department அவர்களை சந்தித்து தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர். மேலும் எதிர் வரும் டிசம்பர் 2 அன்று கொண்டாடப்பட உள்ள அமீரக தேசிய தினத்திற்கும் தங்களின் வாழ்த்துகளை முன்னதாக தெரிவித்துக்கொண்டனர்.

பிரேசில், துருக்கி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்த எக்ஸ்போ கண்காட்சியை நடத்தப் போட்டியிட்டிருந்தன. இந்தப் போட்டியில் துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பாரிஸில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் துபாயில் இருக்கும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் இரு பக்கங்களிலிருந்தும் வெடிகள் வெடிக்கப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த எக்ஸ்போ கண்காட்சி ஒரு மத்திய கிழக்கு பகுதி மாநகரில் நடப்பது இதுவே முதன்முறை.

இந்த கண்காட்சியை உலகமே பிரமிக்கும் வகையில் நடத்தப்போவதாக துபாயின் மன்னர் ஷேக் அல் மக்தூம் உறுதியளித்திருக்கிறார்.
இதை நடத்த புதிய இடம் ஒன்றுக்காக சுமார் ஒன்பது பிலியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும்.

2015ம் ஆண்டுக்கான எக்ஸ்போ இத்தாலியில் உள்ள மிலான் நகரில் நடக்கவிருக்கிறது.
நன்றி; 

செய்தியும், புகைப்படமும் 
N.K.M. நூர் முஹம்மது [ நூவண்ணா ]





Wednesday, November 27, 2013

மிரட்ட வரும் பேய் !? பயமுறுத்தல் தொடர்கிறது..!

அது ஒரு அழகிய தென்னந்தோப்பின் நடுவில் அமைதியை மொத்தமாக விலை கொடுத்து வாங்கியது போல அமைந்திருக்கும் குக்கிராமம். அந்த கிராமத்திலேயே கொஞ்சம் வசதி படைத்த குடும்பம் அது. அவள் புருஷன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்.வெளிநாட்டில் சம்பாரித்த பணத்தில் ஊர் எல்லையில் மனை விற்ற புரோக்கரிடம் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டி குடிபுகுந்திருக்கிறார்கள். அந்தப்பகுதிக்கு புதிதாக குடிவந்த இரண்டு மூன்று வீடு மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. இரண்டு பிள்ளைகளுடன் அந்த புதிய வீட்டில் அவள் தனியாக வசித்து வருகிறாள். ஒரு நாள் இரவு...

டேய்...நாளக்கி பரிச்சைன்டு சொன்னியே...செல்லுல கேம் வெளையாண்டது போதும் வந்து தூங்குங்கடா மணி 10 ஆவுதுல என்று சொல்லியபடி அவர்கள் படுக்கப்பாய் விரித்துப் போட்டாள்...அம்மா தூக்கமே வரமாட்டேங்குதும்மா. ஒரு கதை சொல்லேன் நாங்க தூங்கிற்றோம் என்று இளையமகன் சொன்னான். அவள் உடனே சரிடா நா கதை சொல்றேன் தூங்கிடனும் என்னா என்று சொல்லியபடி....ஒரு ஊர்ல ஒரு ராசாவாம்...என்று ஆரம்பித்து சொல்லி முடிக்குமுன்னே மூத்தமகன்......போம்மா எப்ப பாத்தாலும் இந்தக்கதெயெ கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சி. நல்ல ஒரு பேய்க் கதையாய் சொல்லேன் என்று கேட்டான்.சரி சொல்றேண்டா என்று சொல்லியபடி இவர்களைத் தூங்கவைப்பதற்க்காக கற்பனையில் உதித்த ஒரு பேய்க் கதையை சொன்னாள். கதை கற்பனைக் கதையானாலும் அதைச்சொன்ன அவளுக்கே என்றுமில்லாமல் அன்று அவளையும் அறியாமல் மனதினுள் பயம் தொற்றிக் கொண்டது. உள்மனதில் பயம் இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டவளாய் டியுப் லைட்டை அணைத்து விட்டு ஊதா நிறம் கொண்ட நைட் லாம்பை மட்டும் எரிய விட்டுவிட்டு படுக்கைக்கு வந்து பயத்துடன் பிள்ளைகளை அணைத்தபடி உறங்கிப் போனாள்....

தூக்கத்தில் பிள்ளைகளின் அணைப்பிலிருந்து விடுபட்டு நிமிர்ந்துபடுத்தவளாய் உறங்கிக் கொண்டிருக்கையில்...அப்போது...........

திடீரென தமது மேல் யாரோ வந்து அமர்ந்து இருப்பது போன்ற ஒரு உணர்வு...சுதாரிக்கும் நிலைக்கு வர முயற்ச்சித்து தோற்றுப் போனாள். கைகால்களை அசைக்க முயற்ச்சித்தாள். அசைக்க முடிய வில்லை. சப்தம்போட வாயை அசைத்துப் பார்த்தாள். முடியவில்லை. இப்படி எல்லா முயற்ச்சியிலும் தோற்றுப்போய் அந்த உருவமில்லா நிழலுடன் போராடிக் கொண்டிருக்கும் போது திடீரென அந்தப் பிடியிலிருந்து விடுபட்டாள்... பயத்தில் உடம்பெல்லாம் வியர்த்து நடுங்கி உறைந்து போனவளாய் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள். பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மேல் உத்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் காத்தாடி சுழன்று கொண்டு ச்ஸ்ஸ்ஸ்ஸ்..என்ற தனக்கே உரித்தான மெல்லிய ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தன.சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் டக்..டக்..டக்..என்ற தனது ஒலியை ஓயாமல் விட்டுக் கொண்டிருந்தன.

பயத்தின் உச்சியில் இருந்த அவள் ஏதோ காத்து கருப்பு இங்கே நிக்கிது என்ன செய்றதுண்டு ஒன்னும் புரியல...என்று தனக்குள் முணுமுணுத்தபடியே மீண்டும் தமது பிள்ளைகளை அணைத்தபடி தூங்க முயற்ச்சித்தாள்...அப்போது....

கண்ணயரும் நேரத்தில் பூட்டியிருக்கும் அந்த சிறிய அறையின் உள்ளே இருந்து தாம் இதுவரை கேட்டிராத கோரசாக பல வகையான மிருகங்கள் ஒன்றுகூடி சப்தமிடுவது போன்ற ஒரு வித்தியாசமான திகில் கலந்த ஒலிச் சப்தம் வந்தது....

நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்த அந்த சப்தம் அவளின் செவிகளில் ஊடுருவி தூக்கத்திலிருந்து விடுபடச் செய்தது. மனது படபட என்று துடிக்க படுக்கையை விட்டு எழுந்து சென்று பார்க்கக்கூட பயத்தில் அவளால் முடியாமல் போக... அமர்ந்து இருந்தபடியே முட்டிக்காலால் தவந்து சென்றவாறு அந்த அறைக்கதவு அருகில் போனபோது அந்த ஒலிச்சப்தம் சட்டென நின்று விட்டது....

மீண்டும் அவள் பயத்தைச் சுமந்தபடி படுக்கச் சென்றபோது.....காம்பவுண்டு சுவற்றில் உள்ள காலிங் பில் சப்தம் ஒலிக்க ஆரம்பித்தது. அப்போது அந்தத்தெரு நாயும் ஆவேசத்துடன் குரைத்தன. அத்தோடு மெல்லிய இனிய குரலில் நெஞ்சை வருடும் ஒரு சினிமா பாட்டுச் சப்தமும் ஒலித்தது..வெண் மேகமே...வெண் மேகமே...கேளடி என்கதையை.....

இது சந்தேகமே இல்லே...ஏதோ காத்து கருப்புதான் நம்ம வீட்டுக்கு வந்துடிச்சி....நாம பூஜெ பரிகாரம் எதுவுமே பண்ணாமே இங்கே குடிவந்தது தப்பா போச்சி என்று... தனக்குள் பேசிக் கொண்டு பைத்தியம் பிடித்தவள் போல் புலம்ப ஆரம்பித்து விட்டாள். . சிறிது நேரமே நீடித்த அந்த பாட்டு சப்தம் திடீரென அமைதியாகி விட்டன. ஒலித்துக் கொண்டிருந்த காலிங்பில் சப்தமும் நின்று விட்டன.

அதற்குப் பிறகு அன்று இரவுமுழுதும் எப்போது விடியும் என்று எதிர்பார்த்தவளாய் தூங்காமல் கண்கள் சிவக்க அதிர்ச்சியில் அவள் முகமே மாறிப்போய் இருந்தது. விடிந்ததும் காலை 7 மணிக்கே பிள்ளைகளை எழுப்பி விட்டுக் கொண்டிருக்கும் போது அந்த சிறிய ரூமிலிருந்து இரவு பயமுறுத்திய அந்த மிருக ஒலிச் சப்தம் மீண்டும் கேட்டது.

விடிந்து காலைநேரமானதால் தைரியமாக அந்த ரூம் கதவைத் திறந்து பார்த்தாள்.....அங்கே...... அவளது செல் போன் சிணுங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து கோபத்துடன்.....இந்த போனெ யார்ரா இங்கே வச்சது.. என்று கேட்கவும் இரவு கேம் ஆடிக் கொண்டிருந்த இளையமகன்...கேம் விளையாடிட்டு நா தாம்மா ராத்திரி அந்த ரூமில உள்ள சார்ஜெர்ல போட்டு வச்சேன். என்று இரவு நடந்த சம்பவம் என்னவென்று அறியாமல் புத்திசாலித்தனமான வேலையைச் செய்தவன் போல் புன்சிரிப்போடு சொன்னான். சரி ரிங்டோன யார்ரா மாத்தினது.!? அண்ணேந்தாம்மா மாத்தி வச்சிச்சி...என்று சொன்னதும்...ஏன்டா இந்த ரிங்க்டோனெ போயி மாத்தி எடுத்து வச்சே இனி போனெ தொட்டுப்பாரு...என்று சொன்னதும் விறைப்பாக தலைகுனிந்தபடி நின்றான். அவளுக்கு சிரிப்பதா கோபப்படுவதா என்று ஒன்றும் புரியாமல் நிற்கும்போது.

சிணுங்கிக் கொண்டிருந்த செல்லை ஆன் செய்து ஹலோ என்று சொல்லி முடிப்பதற்குள் மறுமுனையில் என்ன தங்கச்சி நீ... இப்புடியா தூங்குறது.! நைட் அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லாம போய்டிச்சி. அதான் உனக்கு போன்போட்டேன் நீ போனெ எடுக்கலெ. அதோட அம்மாவும் ஒம்பேரச் சொல்லி மொனங்கிக்கிட்டே இருந்துச்சி அதான் நேர்ல வந்து ஒன்னே கூட்டிக்கிட்டு போலாம்ண்டு பைக்கெ எடுத்துக் கிட்டு வந்தேன். வீட்டு காலிங் பில்ல அடிச்சேன் நீ எழுந்திரிச்சி வரலெ. நா இந்த தெருவுக்கு புது ஆளாச்சா... அதான் நாய் வேற கொலக்க ஆரம்ச்சிடிச்சி நா இங்கே நின்னுகிட்டு இருக்கப்போ உங்க அண்ணியும் போன்போட்டு சீக்கிரமா வாங்க அம்மாவே இப்பவே போய் ஆஸ்பத்திரியிலே காட்டிட்டு வந்துடலாம்ண்டு கூப்பிட்டா அதான் நா திரும்பி போயிட்டேன் என்று இரவு நடந்ததை விபரமாக அண்ணன் சொல்லிக் காட்டினான்.

அவள் எல்லா விபரத்தையும் கேட்டுவிட்டு அந்த இரவு தனக்கு நடந்ததை அண்ணனிடம் சொல்லிக்காட்டிவிட்டு...அண்ணே உங்க செல்லுல உள்ள ரிங் டோனே முதல்லே மாத்துங்கண்ணே..வெண் மேகமே...வெண் மேகமே...கேளடி என்கதையை..... என்று சிரித்துக் கொண்டு சொன்னாள்.அம்மா இப்போ எப்படி இருக்காங்க அண்ணே..நா பசங்கள ஸ்கூலுக்கு அனுப்ச்சி வச்சிட்டு அம்மாவே பாக்க வர்ரண்டு அம்மாகிட்டே சொல்லுங்கண்ணே.! என்று சொல்லிவிட்டுசெல்போனை சிரித்துக் கொண்டே மீண்டும் சார்ஜரில் போட்டு வைத்தாள்.

அப்போ எல்லாம் மனசுதான் காரணம் அரண்டவங்கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்டு ஒரு பழமொழி சொல்லுவாங்களே அது சரியாத்தான் போச்சு... என்று தனக்குள்ளேயே பேசி கொண்டு நிம்மதியுடன் அந்தவீட்டில் வாழ ஆரம்பித்தாள்.

குறிப்பு :- குழந்தைகளிடம் நாம் உபயோகிக்கும் செல்போனை கேம் விளையாடுவதற்காக கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். அப்படியே கொடுத்தாலும் திரும்ப வாங்கும்போது ரிங்க்டோன் போன்ற அதன் செட்டிங்கை செக் பண்ணிக் கொள்வது நல்லது இரவில் தூங்கும் போது செல்போனை தம் பார்வையில்படும்படி வைத்துக் கொண்டு தூங்கினால் இத்தகைய நிகழ்விலிருந்து விடுபடலாம். அத்தோடு செல்போனில் தேவையற்ற பாட்டு, திகில் ஒலி போன்ற ரிங்க்டோன் வைப்பதை தவிர்த்துக் கொண்டால் நல்லது.
பயமுறுத்தல் தொடரும்...
அதிரை மெய்சா 

Monday, November 25, 2013

அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) இறுதி பேருரை,


அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் முஹம்மது நபி (ஸல்அவர்கள் விடைபெரும் ஹஜ் அரஃபா மைதானத்தில் ஆற்றிய இறுதி பேருரையை உங்களுக்காகஇங்கு பதிவு இடுகிறேன்.

இந்த இறுதி உரை மிகவும் வரலாற்று சிறப்பு மிக்கதுவாழ்வில் ஒவ்வொரு முறை இதை படிக்கும் போதும் உங்கள் இறை அச்சம் அதிகமாவதை கண்கூடாககாணலாம்.
ஒவ்வொரு வார்த்தைகளும் இரத்தின சுருக்கமாக மிக ஆழமான அர்த்தங்களை கொண்டது.
இந்த உரையை படிக்கும் மாற்று மத நண்பர்கள் மத்தியில் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்அல்லது இஸ்லாத்தை பற்றிய தவறான சிந்தனையைபோக்கும்.

இன்ஷா அல்லாஹ்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்அவர்களின் இறுதிப் பேருரை..

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்ததுஅங்குகூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.


    அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு (இப்போது ஹிஜ்ரி 1435,
1425 வருடங்களுக்கு முன்னால் சொன்ன பொன்மொழிகள்)
ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும்அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்துஇருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள்அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தைமகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்)அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

    இறைத்தூதர் முஹம்மது(ஸல்அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல் ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து "மினா'விற்குஅழைத்துச் சென்றார்கள்அங்கு ளுஹர்அஸ்ர்மக்ரிப்இஷாஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின்தோழர்களுடன்அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள்அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்ததுஅதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும்வரை தங்கி இருந்தார்கள்அதன் பிறகு தமது "கஸ்வாஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறிஅதில் பயணித்து, "பத்னுல்வாதிஎனும் பகுதிக்கு வந்தார்கள்.அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி(ஸல்அவர்களைப் பார்த்தபடி நிற்கஅதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒருசொற்பொழிவு ஆற்றினார்கள்.

    நபி (ஸல்)அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரைஎன்பதாக இன்று அறியப்படுகிறது.

    கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால்நபி(ஸல்அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலைஉருவானதுஎனவேஅங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்துதமது பேச்சை எல்லோரும்செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)

தொடக்க துதி மொழிகள்

    நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கேஅவனையே நாம் புகழ்கிறோம்அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்நம்முடைய மன இச்சைகளின்கெடுதிகளை விட்டும்நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம்யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுவானோஅவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லையாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோஅவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும்இல்லைஇன்னும்நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லைஅவன் தனித்தவன்அவனுக்குக் கூட்டாளியாரும் இல்லை.மேலும்நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மதுஅவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.

பிரிவின் முன்னறிவிப்பு....

   ... மக்களேஎன் பேச்சை கவனமாகக் கேளுங்கள்இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

    மக்களேஉங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ,எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லைஎந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோஎந்தகருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லைஇறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்நிச்சயமாகஅல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

தலமைக்குக் கீழ்ப்படிவீர்!

    ... மக்களேஅல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனியஅடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர்அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்கேட்டுநடங்கள்; (அவருக்குக்கீழ்ப்படியுங்கள்!

பிறர் உடமையைப் பேணுவீர்!

    ... மக்களேஇந்த (துல்ஹஜ்மாதமும்இந்த (துல்ஹஜ் 9ம்நாளும்இந்த (மக்காநகரமும் எவ்வளவு புனிதமானவையோஅப்படியே உயிர்களும்உங்கள்உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

அராஜகம் செய்யாதீர்கள்!

    அறிந்து கொள்ளுங்கள்எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.

    உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப்போகிறீர்கள்அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன்உங்களில்எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால்அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

பணியாளர்களைப் பேணுவீர்!

    ..மக்களேமுஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்உங்கள் வேலை ஆட்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்அவர்களைநன்றாகப் பராமரியுங்கள்நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!

மறுமைக்கு அஞ்சுவீர்!

    ... குரைஷிகளேநாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்துவிடாதீர்கள்அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது

அநீதம் அழிப்பீர்!

    அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைக்கபட்டு விட்டனமேலும்இன்று வரையிலான எல்லா வட்டிக்கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன்எனினும்உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.

    வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான்எனவேமுதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்தஅப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச்செல்லாததாக ஆக்குகிறேன்அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டனஇனிபழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமைஎவருக்கும் இல்லைஇதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கானபழிவாங்கலை ரத்துச் செய்கிறேன்அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன்

முறைதவறி நடக்காதீர்!

    அறிந்து கொள்ளுங்கள்குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்)மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாகஅழைக்கிறாரோஎவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோஅவர்கள் மீது அல்லாஹ்வுடையவானவர்களுடையஇன்னும்மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.



உரிமைகளை மீறாதீர்!

    ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாதுஅப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது.அதற்கு நபியவர்கள், "ஆம்அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்ததுஎன்றார்கள்.

    ... மக்களேஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான்இனிஎவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில்எழுதக் கூடாது.

    இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின்பயன்பாடு தீர்ந்தவுடன்அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்இழப்பீடுகளை நிறைவேற்றதலைவனே பொறுப்பாளன்.

பெண்களை மதிப்பீர்!

    கவனியுங்கள்பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்அவர்கள் உங்களுக்குக்கட்டுப்பட்டவர்கள்அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள்இருக்கின்றனவோஅதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றனஅவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடைஆற்றட்டும்அவர்களுக்குரிய கடமை என்னவென்றால்நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோஅவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்;இன்னும்மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்அவர்கள் குற்றம் புரிந்தால்அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டுஅதுஅவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும்அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்அவர்களுக்கு நன்மையைநாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள்அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்

இரண்டைப் பின்பற்றுவீர்!

    மக்களேசிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன்உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்விட்டுச் செல்கிறேன்நீங்கள் அவற்றைப் பின்பற்றினால்,ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

எச்சரிக்கையாக இருப்பீர்!

    மக்களேஉங்களது இந்த நகரத்தில்தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான்ஆனாலும்அவன் மகிழ்ச்சியுறும் விதமாய்நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள்ஆகவேஉங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்!

    இன்னும், (மகா பொய்யன்தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன்அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்தம்சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்குஅவனைப் பற்றி எச்சரித்தார்கள்அவர்களுக்குப்பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள்மேலும், (என் சமுதாயத்தினரானஉங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்அவன் தோன்றுவான்.அவனது (அடையாளத்தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும்நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத்தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன்அவனோ, (தஜ்ஜாலோவலது கண்குருடானவன்அவனது கண் (ஒரே குலையில்துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.

இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
   
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படிமுன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும்ஆதனால் நிராகரிப்பவர்கள்தான்வழிகெடுக்கப்படுகிறார்கள்எனென்றால்அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதைஆகுமாக்கிக் கொள்கிறார்கள்மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள்இவ்வாறு அவர்கள் செயவதன்நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கிஅல்லாஹ்தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான்.

    அறிந்து கொள்ளுங்கள்நிச்சயமாக காலம்வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றேஇப்போதும்சுற்றிவருகின்றதுஅல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும்இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று,அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுஅவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியனமூன்றுதொடர்ந்து வருபவைஅவை துல்கஅதாதுல்ஹஜ்,முஹர்ரம்நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும்.

 சகோதரம் பேணுவீர்!

    ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார்முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களேஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவேஆகுமானதல்லமனமுவந்து கொடுத்தாலே தவிரஉங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள்

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!

    ... மக்களேஉங்கள் இறைவனையே வணங்குங்கள்உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்கடமையான ஐவேளைத் தொழுகைகளையும்தவறாது பேணுங்கள்; (ரமழானில்நோன்பு நோற்று வாருங்கள்விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்;உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

    ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்மகனுடைய குற்றத்திற்காக தந்தையோதந்தையின் குற்றத்திற்காக மகனோதண்டிக்கப்பட மாட்டார்.

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

    ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயேமுடிந்து விட்டனஎன் பிரார்த்தனையைத் தவிரநான் அதை மறுமை நாளுக்காக என்இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன்அறிந்து கொள்ளுங்கள்மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக்கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள்நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில்உட்கார்ந்திருப்பேன். (


    மக்களேஎனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லைஉங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை.

    இங்கு வந்திருப்பவர்கள்வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்விஷயம் சென்று சேருபவர்களில் சிலர்நேரடியாககேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.

    பிறகு நபி(ஸல்அவர்கள் மக்களை நோக்கிமறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்றுகேட்டார்கள்அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பைநீங்கள்நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்குநன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள்உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள்தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகுஅதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவாஇதற்கு நீயேசாட்சிஇறைவாஇதற்கு நீயே சாட்சிஇறைவாஇதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:


""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்மேலும்நான்உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்இன்னும்உங்களுக்காக நான்இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன்5:3)
 சங்கை ரிதுவான்
தகவல் ;A,fazee jabbar
Toronto,Canada