Thursday, January 21, 2016

பச்சிளம் பருவம்

பச்சிளம் பருவம் அறிந்ததெல்லாம், 
பசி, தூக்கம் இவ்விரண்டும் தானே !
இறைவனது ப்படைப்பில், ஆறறிவை
தாங்கி, தவழ்ந்து, விழுந்து, எழுந்து
நடக்க நாள் ப்பொழுது கடக்க!
மல்லிகை மொட்டாய், எட்டிப்
பார்க்கும், பற்கள் தெரிய சிரிக்கும்,
அந்த சிரிப்பினில் தான் எத்தனை அர்த்தம் !
கள்ள சிரிப்பு என்பதா ?
செல்ல சிரிப்பு என்பதா ?
கவலைத்தெரியா சிரிப்பு என்பதா ?
அன்பின் இதழ்விரிப்பு என்பதா ?
சிரித்து மகிழ்ந்து,
விளையாடி சோர்ந்து,
தூங்கும் வேளையிலும் என்ன -
அது சிரிப்பு ? கோடி கோடியாய்,
கொட்டிக்கொடுத்தாலும் , தேடி
எங்கும் அலைந்தாலும், அச்-
சிரிப்புக்கு ஏது ஈடாகுமோ
facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval