Thursday, July 27, 2017

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது!*

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்"

*ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்*

*பில்கேட்ஸ் தனது 30 வயதுகளிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்.*

*ஆனால் INDITEX SPAIN என்ற நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.*

*ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது.*

*இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும், சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.*

*ஒருவர் 22 வயதில் தனது வியாபாரம், தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழை ஆகிறார்.*

*ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார்.*

எம்.ஜி.ஆர். க்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் *முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம்.* கடைசி 30 வருடங்கள் சாகும்வரை  ராஜயோக வாழ்க்கை.

*சர்ச்சில் தனது 82 வது வயதில் "History of English Speaking People" என்ற புத்தகத்தை எழுதினார்.*

*பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் "Pertouched Pepler" என்ற நாவலை எழுதினார்.*

*டால்ஸ்டாய் தனது 82 வது வயதில் 
"I Cannot Be Silent" என்றார்.*

*வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்...*

*எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.*

*எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால், அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.*

*உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.*

*யார் கண்டது, அடுத்த நொடியே நீங்கள் கூட மிகப்பெரிய "ஞானம் பெற்றவர்" ஆக முடியும். ஏனென்றால் இந்த உலகமே ஒரு பெரிய "சடுதிமாற்றத்தில்" உருவானது தானே!*

*எனவே, எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்க தேவையில்லை.*

*இங்கே இப்போது இந்த நொடியில்  என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ? அதை முழுமையான விழிப்புணர்வுடன் செய்யுங்கள்.* 

*அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.*

*தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.*

*ஆனால், பேர்-ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.*

*இது தான் வாழ்க்கை.*

*இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே விருப்புவெறுப்பற்ற நிலையில் கடமைகளை செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்!*

*உடலை புரிந்து கொண்டவர் "உடற்பயிற்சி" செய்கிறார்.*

*மனதை புரிந்து கொண்டவர் "தியானம்" செய்கிறார்.*

*உயிரை புரிந்து கொண்டவர் "காயகல்பப்பயிற்சி" செய்கிறார்.*

*அறிவாகிய இறைவனை புரிந்து கொண்டவர் "சமூகப்பணி" செய்கிறார்.*

*ஏமாற்று அரசியலை புரிந்து கொண்டவர் "அரசுக்கு எதிராகப் புரட்சி" செய்கிறார்.*

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

தகவல் N.K.M புரோஸ்கான் 
SYDNEY;AUSTRALIA
தகவல் N.K.M.புரோஸ்கான் 
SYDNEY,AUSTRALIA

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval