Monday, August 24, 2015

அவினாசி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து 7 பேர் உயிரிழப்பு


avilasiஅவினாசி அருகே பழங்கரை என்ற இடத்தில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து, விபத்திற்கு உள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அவினாசி அருகேயுள்ள பழக்கரை என்ற இடத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தி, அந்தப் பேருந்தில் பயணம் செய்த 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த 20 க்கும் மேற்பட்டோர் கோவை, மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயம் காயம் அடைந்தவர்களுள் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval