Friday, December 4, 2015

குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

Snapshot114
புதுவையில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுவை நகரப்பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக புதுவை மாநிலம் பாதிக்கபட்டு உள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்க உள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மழை வெள்ளநிவாரணத்தை பார்வையிட்ட பின் அவர் அறிவித்துள்ளார். முற்றிலும் சேதம் அடைந்த கல்வீடுகளுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் குடிசை வீடுகளுக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிரிவித்துள்ளார். நிவாரண பணிக்கு கூடுதலாக ரூ.200 கோடி மத்திய அரசிடம் கேட்க உள்ளதாக ரங்கசாமி கூறினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval