Tuesday, April 12, 2016

வெற்றிப்பாதை!!


road-to-success1ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!
🐝 இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!

👍கனவு நிறைவேறும்வரை கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்..

👉🏾முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!

🌹வெற்றிப்பாதை!!

🐝 உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!

🐝 அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!

🐝 இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!

🐝 துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறத
🐝 ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது
🐝 தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறத
🐝 செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!

🐝பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!

🐝 மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!

🐝 புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!

🐝தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!

🐝 தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!

👉முயல்வோம்..
வெற்றி பெறுவோம். 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval