Sunday, April 10, 2016

அன்புச் சகோதரனே...!

அன்புச் சகோதரனே...!
அன்னையை இழந்து,
அமைதியை இழந்து
அலைபாயும் மனதுடன் நீ பரிதவித்து 
அல்குர்ஆனை பற்றி
அமைதி மார்க்கத்தில் நுழைந்தாய்.
இன்று மன அமைதி தரும்
இறை அருட்கொடையான
பெண் குழந்தையை பெற்று இருக்கிறாய்
கையில் பற்றி இருக்கிறாய்.
உன் முகத்திலுள்ள மலர்ச்சியை கண்டு
உன்னை விட நாங்கள் மகிழ்கிறோம்
எங்கள் சகோதரனே.
அமைதி மேலும் மேலும் உன் வாழ்வில் நிலவட்டும்
மனமகிழ்ச்சியுன் எங்கள் துஆக்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval