Thursday, November 22, 2018

நெகிழ்ச்சி

Image may contain: one or more peopleசென்னையில் இருந்து சிங்கப்பூர் பறக்கத் தயாராகிறது விமானம். பயணிகள் இருக்கைகளில் அமர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்புக்கு மத்தியில், பயணிகளைக் கடந்து ஒருவர்,முன்னேறுகிறார். இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் பாதங்களைத் தொட்டு வணங்கி, மீண்டும் தனது இடத்துக்குத் திரும்புகிறார்.
அவர் அந்த விமானத்தை இயக்கப்போகும் விமானி. அவர் பெயர் பிரதீப் கிருஷ்ணன்! அவரது கரம் பற்றி முத்தமிட்டு, வாழ்த்திய பெண்மணிகள் வேறு யாருமல்ல, அது அவரது தாயாரும் பாட்டியும். அவர்களுக்கு அது முதல் விமானப் பயணம்.
தங்கள் பிள்ளை விமானியாகி, அவர் இயக்கும் விமானத்தில்தான், முதன்முதலாக விமானத்தில் பயணிப்போம் என்பது அவர்களது கனவு.
பயணங்களில் இது வித்தியாசமானது.
எளிய குடும்பங்களின் கனவுகள் சாத்தியமாகும் பூமியும் காலமும் இது. ஒரு கனவு நனவாகிறது...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval