Saturday, August 3, 2019

இன்று காலையில் ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

சார்  கவர்மெண்ட் தந்த 2000 யை உங்க பேங்க் அக்கவுண்டில போடணும். உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லறேன் சரியான்னு சொல்லுங்க. தப்பா இருந்தா சரியான நம்பர் சொல்லுங்க அமௌண்ட் கிரடிட் ஆகிடும் என்றார்.

நான் உடனே அது எனக்கு வாங்கத் தகுதி இல்லை. நான் இன்கம்டாக்ஸ் கட்டுறவன் அதனால வேண்டாம்னு எழுதிக் கொடுத்திட் டேனே என்றதும் இணைப்பு துண்டிக்கப் பட்டது.

இது ஒரு புதுவிதமான மோசடி வலை விரிப்பு போலிருக்கு.

முதலில் எதாவது பேங்க் பேரும்  அக்கவுண்ட் நம்பரும் சொல்லுவார்கள்.
அது தப்பு என்று சொல்லியதும் நம்ம அக்கவுண்ட் டீடெயில்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு அப்புறம் பணம் போட ஒரு ஒ.டி.பி வரும் சொல்லுங்க என்பார்கள். சொன்ன மறு நிமிடம் நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் எடுக்கப்பட்டிருக்கும்.

ஆகவே இதைப் படிக்கும் நண்பர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். வங்கிகள் கணக்கு விபரங்களைக் கேட்காது என்பது எல்லாருக்கும் பரவலாகத் தெரிந்து விட்டது. ஆகவே கார்ப்பரேஷன் ஆட்கள் போல பேசி மோசடி செய்கிறார்கள். கவனம்.

(இப்பதிவை மற்றவர்களுக்கும் பகிரவும்)
தகவல்; அதிரை நவாஸ்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval