Friday, February 3, 2017

கடலில் கலந்த எண்ணெயை சுத்தம் செய்ய போகும் தன்னார்வலர்கள் தெரிந்த கொள்ளவேண்டியவை


கடலில் கலந்த எண்ணெயை சுத்தம் செய்ய போகும் தன்னார்வலர்கள் தெரிந்த கொள்ள வேண்டியவை►இது தொடர்பாக அனுபவம் வாய்ந்த மேற்பார்வையாளர்கள் சுத்தம் செய்வதை வழிநடத்த வேண்டும்..

►தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் இருந்தால் மட்டுமே சுத்தம் செய்ய இறங்க வேண்டும்..

►தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்திருக்க வேண்டும்..

►கடற்கரையில் சுத்தம் செய்பவர்கள் என்றால் 20 நிமிடம் சுத்தம் செய்வதும் பிறகு 40 நிமிடம் ஒய்வு எடுக்க வேண்டும்..


தகுந்த பாதுகாப்பு இல்லாமல் கடலில் கலந்த எண்ணெயை சுத்தம் செய்வீர்களானால் ஏற்படக்கூடிய விளைவுகள்

►தோல் எரிச்சல், தடிப்பு

►கண்களில் எரிச்சல் ஏற்படும்

►தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி

►எண்ணெய் கலந்த காற்றை சுவாசிப்பதால் தொண்டை, நுரையீரலில் தொற்று ஏற்பட வாய்ப்பு

►காலில் கொப்பளங்கள்

எந்த முன்னெச்சரிக்கையும் பின்பற்றாமால் நீண்ட நேரம் எண்ணெய் கலந்த கடல் நீருடன் இருந்தால் ஏற்படக்கூடிய விளைவுகள்

►புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு

►சுபாவம் மற்றும் மனரீதியாக பாதிப்பு

►பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு

►மலட்டுத்தன்மை
news7
























No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval