Monday, July 27, 2015

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணம் !

ராமேஸ்வரத்தை சேர்ந்த மர்ஹும் ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் மகனும்  ஏ.பீ.ஜெ.முத்துமீரா மரைக்காயர் அவர்களின் சகோதரருமான முன்னாள் ஜனாதிபதி ஜனாப் ஏ.பீ.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு வஃபாதானார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார். அவருக்கு வயது 84.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..
.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் தளத்தில் பதியப்படும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval