Sunday, March 18, 2018

புதுக்கோட்டை தாயின் தலையை துண்டாக்கி தலையோடு காவல் நிலையத்தில் சரண் அடைந்த மகன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறவன்பட்டி சேர்ந்தவர் ராணி கடந்த 2007 ஆண்டு தனது கணவரை கொலை செய்த வழக்கில் ராணியை போலிசார் கைது செய்தனர். தலையில் கல்லை போட்டு கணவரை ராணி கொன்றதாக கூறப்பட்டது. இருப்பினும் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி
சிறையில் இருந்த ராணி விடுதலையானார்.
ராணிக்கு 5 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தான் ஆனந்த். இளைய மகன் வீட்டில் ராணி வசித்து வந்துள்ளார். ஆனந்த் அதே பகுதியில் தனி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ராணிக்கும் மூத்த மகன் ஆனந்திற்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்படும் எனக் கூறப்படுகின்றது. சொத்தில் தனது பங்கை கேட்டு தாய்க்குட“ மகனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
நேற்றும் இதே போன்று ராணிக்கும் ஆனந்திற்கும் சொத்துக்களை பிரித்துக் கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது தாய் ராணி ”நான் உயிரோடு இருக்கும் வரை உனக்கு சொத்தில் சல்லி பைசா தரமாட்டேன் மீறி கேட்டால் உன் அப்பன கொலை செய்த மாறி உன்னையும் கொலை செய்து விடுவேன் என ஆனந்தை மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இதை கேட்டு அதிர்ச்ச அடைந்த ஆனந்த் தனது தந்தையை கொன்றது தாயா என ஆத்திரமடைந்து தனக்கு சொத்தில் பங்கு கிடைக்காத விரக்தியில் இன்று காலை பேருந்த நிலையத்தில் தனது 10 வயது கடை மகனுடன் காந்திருந்த ராணியை அங்கு வந்த ஆனந்த் சரமாரியாக வெட்டி ராணியின் தலையை துண்டாக்கினார்.
10 வயது தம்பி கண் முன்னே ஆனந்த் தாயை வெட்டி சாய்த்துள்ளார்.
தாயின் தலையை வெட்டிய கையோடு அந்த தலையை தூக்கிக் கொண்டு அருகே இருந்த கறம்பக்குடி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
சொத்து பிரச்சனையில் தகப்பனை கொன்ற செய்தி கேட்டு பெற்ற மகனே தாயின் தலையை தூண்டாக்கிய சம்பம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகப்பனை கொன்ற ஆத்திரம், சொத்தை கேட்ட தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் , சொத்தில் தனக்கு பங்கு கிடைக்காத ஆத்திரம் என ஆனந்தை இந்த கொடூரத்தை செய்யத் தூண்டியுள்ளது.


போலிசார் இது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval