Thursday, March 2, 2017

பூனை குட்டி என நினைத்து சிறுத்தை குட்டி வளர்த்த சிறுவன்


விசாகப்பட்டினம்:பூனைக் குட்டிகள் என நினைத்து, சிறுத்தை குட்டிகளை வளர்த்த சம்பவம், 
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி 
நடக்கிறது.இங்கு, விசாகப்பட்டினத்தில் வசிக்கும் சரஸ்வதி என்பவரது, 6 வயது மகன், 
சமீபத்தில், தன் நண்பர்களுடன், புதர் அருகில் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது, அங்கிருந்த இரண்டு பூனைக் குட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்து, பெற்றோரிடம் காட்டினான். அந்த குட்டிகளுக்கு, பால் மற்றும் உணவளித்து விளையாடினான். பூனைக் குட்டிகளும், அந்த சிறுவனுடன் நன்கு பழகின. இரு நாட்களுக்கு பின், இவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர், பூனைக் குட்டிகளை பார்த்து சந்தேகமடைந்து, வனத்துறைக்கு தகவல் அளித்தார். 

சரஸ்வதியின் வீட்டுக்கு வந்த வனத்துறையினர், அவர்கள் வளர்த்தது பூனைக் குட்டியல்ல என்றும், சிறுத்தை குட்டிகள் என்றும் தெரிவித்தனர்.சிறுத்தை குட்டிகளை எடுத்துச் செல்வதை, தாய் சிறுத்தை பார்த்திருந்தால், சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனக்கூறி, இரு சிறுத்தை குட்டிகளையும் வனப்பகுதியில் விட்டனர்

courtesyDinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval