Sunday, November 22, 2015

செரிமானமின்மையை போக்கும் எளிய பாட்டி வைத்தியம்

Stomach ache
• தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்தால் ‘சீரகக் குடிநீர்’ தயார். இந்த சீரகக் குடிநீரை தினமும் குடித்து வந்தால் எந்தவித செரிமானக் கோளாறுகளும் வராது.
• இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம் மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க செரிமானமின்மை சரியாகும்./span>
• கொத்தமல்லி பூவை தண்ணீரில் காய்ச்சி காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்தால் செரிமானமின்மை மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும். • எலுமிச்சையை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் செரிமானமின்மை குணமாகிறது.
• பப்பாளி ஒரு நல்ல மலமிளக்கி. செரிமானமின்மையைப் போக்கி நிவாரணம் அளிக்கிறது.
• சீரகத்தை நன்றாக சிவக்க வறுத்து வைத்துக்கொண்டு, அப்பொடியை மூன்று வேளையும் ஒரு தேக்கரண்டி வெந்நீரில் குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
• வெதுவெதுப்பான நீரில் சுக்கு பொடியைக் கலந்து குடித்தால் செரிமானமின்மையில் இருந்து விடுபடலாம்.
• நான்கு பேரிச்சம்பழம் தினமும் சாப்பிடுபவர்களுக்கு செரிமானப்பிரச்சனை வருவதில்லை.
• உணவு எளிதில் செரிமானமாவதற்கு அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval