Sunday, April 29, 2018

ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்த தமிழர்களை கைது செய்த ஆந்திர போலீசார்!

Image
திருப்பதியில் ஓட்டலில் உணவருந்தி கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட தமிழர்களை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், 10 மணி நேரத்துக்கு பின் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள ஹெச்.டி.காம்ப்ளக்சில் செயல்படும் ஓட்டலில் 10-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இன்று காலை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

மேலும், வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்ட அவர்களை அதே வாகனத்தில் வைத்துக்கொண்டு போலீசார் சுற்றுவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், மாலை 6 மணியளவில் திருப்பதி கபிலிதீர்த்தம் அருகே உள்ள செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தற்கு கைது செய்யப்பட்ட தமிழர்களை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval