Thursday, April 19, 2018

ஈரநெஞ்சம் கொண்டவர்களே உயிர்காக்க உதவிடுவீர்....!!

Image may contain: 1 person
எட்டயபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் திலீபன், இவருடைய குழந்தையின் பெயர் ரித்வின் பிறந்து 67 நாட்களே ஆகிறது.
குழந்தைக்கு ஈரல் செயலிழந்து விட்டது, குழந்தையை சென்னை பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
குழந்தையின் ஈரலை மாற்றி உயிர்காக்க வைக்க வேண்டுமென்றால் ரூ. 22 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ஈரநெஞ்சம் கொண்ட சகோதரர் சகோதரிகள் தங்களால் இயன்ற பொருளாதார உதவி செய்து குழந்தையின் உயிர்காக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குழந்தை ரித்வின் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தொழுகையில் கண்ணீரோடு இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தந்தையும் உதவி ஆய்வாளருமான திலீபன் அவர்கள் பற்றி முகநூல் முஸ்லிம் மீடியா சேகரித்துள்ள தகவலையும் தருகிறோம்....
திலீபன் உண்மைக்கும் நேர்மைக்கும் பெயரெடுத்தவர், சிறு வயதில் உதவி ஆய்வாளராக பதவி கிடைத்தாலும் அவருடைய நேர்மையாலும், கெடுபிடியாலும் எந்த ஊரிலும் நிரந்தரமாக இருந்ததில்லை,
அவினாசி 6 மாதம், சேந்தமரம் 18 நாள், ஏஆர் பாலை 30, செங்கோட்டை 22 நாள், மீண்டும் ஏஆர் பாலை 2 நாள், மீண்டும் செங்கோட்டை 24 நாள்,
பணியிடை நீக்கம் 33 நாள்,
கோவில்பட்டி 58 நாள், தூத்துக்குடி 1 நாள், தளமுத்துநகர் 93 நாள், தூத்துக்குடி (மையம்) 136 நாள், திருச்செந்தூர் 253 நாள் பணிபுரிந்துள்ளார்.
தற்போது 67 நாட்களே ஆகியுள்ள குழந்தையை நினைத்து உடைந்து விட்டார்.
தொடர்புக்கு : 9498195244
இப்பதிவை காணும் அனைத்து சகோதர சகோதரிகளும் குழந்தையின் உயிர்காக்க தங்களால் இயன்ற பொருளாதார உதவி செய்து உயிர்காக்கவும்...
(அதிகப்படியாக Share செய்யவும்...)

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval