Tuesday, October 6, 2015

ரூ.1 லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கினால் 'பான் கார்டு' கட்டாயம்; உள்நாட்டில் கருப்பு பணத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை


உள்நாட்டில் கருப்பு பணம் உருவாவதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்காணித்து கண்டுபிடிக்கும் பல நவீன யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில், பெரும் தொகை செலவு செய்யப்படுவதை தீவிரமாக அரசு கண்காணிக்க முடிவு செய்துள்ளது. சென்ற பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதாவது, ரூ.1 லட்சத்திற்கு மேல் பொருட்களை வாங்கினாலும்,  விற்றாலும் பான் கார்டு எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். இதை விரைவில் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
courtesy;Dailythanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval