Tuesday, October 20, 2015

நல்லவர்களை அடையாளம் காட்டும் நல்ல பதிவு-டி.எஸ்.பி வீமராஜ்

நேர்மைக்கு துணை, லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் எனும் பல வாசகங்களை பல நேர்மையான அதிகாரிகள் தன்னுடைய தாரக மந்திரமாக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள், ஆனால் முற்றிலும் வித்தியாசமாக "ஏழையின் சொல் அம்பலம் ஏறும்" என்ற வார்த்தைகளை தன்னுடைய தாரக மந்திரமாக வைத்து வாழ்ந்து வருகிறார் விழுப்புரம் டி.எஸ்.பி வீமராஜ்./span>
தமிழகம் முழுவதும் பல இடங்களில் நேர்மையாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய இவர் தற்போது விழுப்புரம் டி.எஸ்.பி யாக பதவி வகித்து வருகிறார்.ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா? ஆம் ஏறும் என்று சொல்லவைக்கிறது இவருடைய ஆக்சன்..
யார் சென்றாலும் அவர்களை காக்க வைக்காமல் உடனடியாக அவர்களை பார்த்து அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார் இவர். பணக்காரர்களுக்கு முன்னுரிமை, ரவுடிகளுக்கு முன்னுரிமை என வாழும் பல அதிகாரிகளுக்கு நடுவே அத்திபூ பூத்ததுபோல ஏழை, எளிவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் இவர்களை போன்ற அதிகாரிகளை நினைக்கும்போது மனது மிக சந்தோசபடுகிறது...
சரவணக்குமார் வே.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval