Tuesday, October 27, 2015

மனிதாபிமானச் செயல்




நேற்றைய தினம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாளியகாட்டை சேர்ந்த ப்ரியா என்ற பெண்மணியை பிரசவத்திற்காக இரவு 11.30 மணிக்கு அனுமதிக்க சென்றனர்.அபோது அந்த பெண்மணிக்கு இரத்தம் தேவைப்பட்டது. இதையெடுத்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நானும் CBD அதிரை பொறுப்பாளர் சாலிஹ் ஆகியோர் இரத்தம் வேண்டி பல பேரிடம் கேட்டோம்.இரவு என்பதால் சில பேரால் வர முடியவில்லை.உடனே நாங்கள் தாமதிக்காமல் அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் நாங்கள் நாளை இரத்ததான கொடையாளரை அழைத்து வருகிறோம்.நீங்கள் அங்கு உள்ள இரத்த வங்கியில் கேட்டு பாருங்கள் என்றோம் .அடுத்து அவர்கள் கூறிய வார்த்தை எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இரத்தம் இருந்தால் தான் அனுமதிப்போம் இல்லையென்றால் நீங்கள் தஞ்சாவூர் சென்று விடுங்கள் என்று அரசு மருத்துவமனையில் பணி ஆற்றுவோர் கூறிவிட்டனர் என்றும் மேலும் இன்னும் ADMIT பண்ணவே இல்லை என்றும் கூறினார்கள்.இதனையடுத்து CBD மாவட்ட தலைவர் பேராசிரயர்.செய்யது அஹ்மத் கபீர் சார் மற்றும் CBD அதிரை பொறுப்பாளர் சாலிஹ் ஆகியோர் இரவு 12.30 மணியளவில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று நீங்கள் அந்த பெண்ணுக்கு ஒரு யூனிட் இரத்தம் தான் கேக்குறிங்க நாங்கள் நாளை இரண்டு யூனிட் தருகிறோம் இந்த பெண்ணை அனுமதியுங்கள் என்று நம் சகோதர்கள் பேசி அந்த பெண் அனுமதிக்கப்பட்டு தற்போது அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இரவு என்று கூட பார்க்காமல் ஓடோடி சென்று உதவி புரிந்த சகோதர்களுக்கு நன்றிகள் பல........மேலும் உங்கள் சமூக பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்களுடன்
காலித் அஹ்மத்,
CBD மாவட்ட செயலாளர்,
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval