Wednesday, September 2, 2015

வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!

நிலக்கடலை குறித்த மூட
நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள்
இந்தியாமுழுவதும் சர்வதேச
நிறுவனங்களால் திட்டமிட்டு
பரப்பிவிடப்பட்டுள்ளது. நிலக்கடலை சாகுபடி
செய்யப்பட்டிருக்கும் வயலில் அது
கொட்டை வைக்கும் பருவம் வரை
வயலில் எலிகள் அவ்வளவாக
இருக்காது. ஆனால் நிலக்
காய்பிடிக்கும் பருவத்துக்கு
பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி
போட்டிருப்பதை காணலாம் .
நிலக்கடலை செடியை சாப்பிடும்
ஆடு, மாடு, நாய், வயல் வெளியே
சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே
நேரத்தில் குட்டி போடுவது
இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட்
அதிகம் இருப்பதால் கர்பிணிப்
பெண்களுக்கு மிகவும் அவசியம்.
எனவே நிலக் கடலையை தொடர்ந்து
சாப்பிடும் பெண்களின் கர்பப்பை
சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக்
கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது
மட்டுமல்லாது குழந்தைப் பேறும்
உடன் உண்டாகும். தினமும் பெண்கள்
எடுத்துக் கொண்டால் மகப்பேறு
நன்றாக இருக்கும். கருவின் மூளை
மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக
அமையும். கருத்தரிப்பதற்க
ு முன்பே உண்பது மிக மிக உத்தமம்.
இல்லையேல் கருவுற்ற பின்னும்
எடுத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து
நிறைய உள்ளது.மாங்கனீஸ்
சத்துமாவுச்சத்து மற்றும்
கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய
பங்காற்றுகிறது . நாம்
உண்ணும்உணவில் இருந்து
கால்சியம் நமது உடலுக்கு
கிடைக்கவும் பயன்படுகிறது.
குறிப்பாக பெண்கள்
நிலக்கடலையை தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால்
எலும்புத்துளை நோய் வராமல்
பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம்
அளவுக்கு தினமும் சாப்பிட்டு
வந்தால் பித்தப்பை கல்
உருவாவதைத் தடுக்க முடியும். 20
வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட
ஆய்வில் இந்த தகவல்
தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை
போடும் என்று நாம்
நினைக்கிறோம். உண்மையல்ல.
மாறாக உடல் எடை அதிகமாகாமல்
இருக்க வேண்டும் என்று
நினைப்பவர்களும் நிலக்கடலை
சாப்பிடலாம். நிலக்கடலையில்
ரெஸ்வரெட்ரால் என்ற
சத்துநிறைந்துள்ளது . இது இதய
வால்வுகளை பாதுகாக்கிறது.
இதய நோய்கள் வருவதையும்தடுக்
கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி
ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க
பெரிதும் உதவுகிறது.நிலக்
கடலையில் பாலிபீனால்ஸ் என்ற
ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது
நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன்
இளமையை பராமரிக்கவும்
பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு
நல்ல டானிக் போன்றது.
நிலக்கடலையில் மூளை
வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3
நியாசின் உள்ளது. இது
மூளைவளர்ச்சிக்கும் ஞாபக
சக்திக்கும் பெரிதும்
பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும்
சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற
முக்கிய அமினோ அமிலம்
நிறைந்துள்ளது. இந்த வகை
அமினோ அமிலம் செரட் டோனின்
என்ற மூளையை உற்சாகப்படுத்து
ம்.உயிர் வேதிப் பொருள்
உற்பத்திக்கு பயன்படுகிறது.செ
ரட்டோனின் மூளை நரம்புகளை
தூண்டுகிறது.மனஅழுத்தத்தை
போக்குகிறது. நிலக்கடைலையை
தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன
அழுத்தத்தைப் போக்குகிறது
.
கொழுப்பை குறைக்கும்
:
தலைப்பை படிப்பவர்களுக்க
ு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால்
அதுதான் உண்மை. நிலக்கடலை
சாப்பிட்டால் கொழுப்பு சத்து
அதிகமாகும் என்று நம்மில்
பலரும்நினைத்திருப்போம். ஆனால்
அதில் உண்மையில்லை.மாறாக
மனிதனுக்கு நன்மை செய்யும்
கொழுப்பு தான்
நிலக்கடலையில்உள்ளது.
நிலக்கடலையில் உள்ள தாமிரம்
மற்றும் துத்தநாக சத்தானது நமது
உடலின் தீமை செய்யும் கொழுப்பை
குறைத்து நன்மை செய்யும்
கொழுப்பை அதிகமாக்குகிறது.
100 கிராம் நிலக்கடலையில் 24
கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட்
வகை கொழுப்பு உள்ளது.
பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம்
உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது
உடம்புக்கு நன்மைசெய்யும்
கொழுப்பாகும். பாதாமை விட
நிலக்கடலையில் நன்மை செய்யும்
கொழுப்பு அதிகமாக உள்ளது.
நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3
சத்தானது நமது உடலின் நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த
நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து
இந்தியாவில்தான் நிலக்கடலை
அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது
.இவ்விரு நாடுகளின்
மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை
முக்கிய காரணமாகும்.
இந்தியாவில் குழந்தைப்
பேறுக்கான மருந்துகளின்
விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை
உண்ணும் வழக்கம் தடையாக
இருக்கிறது மற்றும் சில இதய
நோய்க்கான மருந்துகளை
விற்பனை செய்ய முடியவில்லை.
எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை
குறித்து தவறான தகவல்களை
பரப்பி நிலக்கடலை மற்றும்
நிலக்கடலைஎண்ணெய் வகைகளை
பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்
கள். இதன் காரணமாக
குழந்தையில்லாத தம்பதிகள்
பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில்
நிலக்கடலையின் விலை
பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே
விலையில் விற்பனை
செய்யப்படுகிறது. ஆனால் இதே
கால கட்டத்தில் அமெரிக்கர்களின்
உணவில்நிலக்கடலையின் பங்கு 15
மடங்கு கூடி இருப்பதுடன்
விலையும் கூடிஇருக்கிறது.
இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை
சாப்பிட ஆரம்பித்தால்
அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம்
விலை கொடுத்து சாப்பிட
வேண்டும் என்று கருதிதான்
இந்தியர்களிடம் நிலக்கடலை
குறித்து தவறான தகவல்கள்
பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு
முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன்
வளர்ச்சியை நிலக்கடலை
சீராக்குகிறது. இதனால்
பெண்களுக்கு விரைவில் குழந்தை
பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு
ஏற்படும் மார்பகக் கட்டி
உண்டாவதையும் தடுக்கிறது.பெண்
களுக்கு பெரிதும் தேவையான
போலிக் அமிலம்,பாஸ்பரஸ்,
கால்சியம், பொட்டாசியம்,
துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள்,
குறுட்டாமிக் அமிலம்
நிலக்கடலையில் நிறைந்துள்ளது.
இதன் காரணமாக பெண்களுக்கு
கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்
ஏற்படுவதையும் தடுக்கிறது.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட
சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40
மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2,
பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) –
93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி
உள்ளது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம்,
பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்த
ான் சத்து அதிகம் உள்ளது என்று
கருதுகிறோம். அது தவறு.
நிலக்கடலையில் தான் இவற்றை
எல்
லாம் விட அளவுக்கதிகமான
சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு
சக்தியை உருவாக்கும் ஆற்றலும்
நிலக்கடலைக்குதான் உண்டு
Ravi SR Ravi

Ravi SR Ravi

p.k.t










No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval