Tuesday, September 29, 2015

நாமக்கல் அருகே உயிரை பறித்த செல்பி மோகம்

kolli_hills
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்பக்காரன்நல்லூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் பிரகாஷ் (18). இவர் நாமக்கல் அருகே எருமபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை பிரகாஷ் சக மாணவர்களுடன் கொல்லி மலைக்குச்சென்று அங்குள்ள அங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தார். பின்னர், நண்பர்கள் அனைவரும் ஒன்றாக செல்பி எடுத்துக்கொண்டனர். பிரகாஷ் மட்டும் தனியாக மலை முகட்டில் நின்று ‘செல்பி’ எடுக்க முற்பட்டார். அப்போது திடீரென கால் வழுக்கி, பாறையில் இருந்து தவறி பிரகாஷ் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வாழவந்திநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval