Friday, March 11, 2016

உரக்கச் சொல்லாதீர்..... பாதிக்கப்பட்ட மக்களின் வாயிலிருந்து உமிழ் வந்து நமது முகத்தில் வி்ழப்போகிறது..

7000 ஆயிரம் கோடியை ஏப்பம் விட்டு உலகம்
முழுவதும் உல்லாச பயணம் வருகிறார் கார்பரேட்
ஃபிராடு விஜய்ய மல்லையா.
2 இலட்சம் கல்வி கடன் வாங்கி அதில் ஒரு
இலட்சத்தை ஒழுக்கமாக செலுத்தி மீத தொகைக்கு
அவகாசம் கேட்ட நீலகிரி கிருஷ்ணன் மற்றும் பொறியியல்
பயிலும் அவரது மகளின் புகைப்படத்தை பேனர் அடித்து
முச்சந்தியில் வைத்து கேவலப்படுத்தியுள்ளது
வங்கி நிர்வாகம்........
பாப்பாநாடு விவசாயி...... பாலன்
தனியார் நிதி நிறுவனத்தில் ( கந்து வட்டிக் கடை)
வாங்கிய டிராக்டருக்கு 80% கடனை வட்டியுடன்
செலுத்தி மீத தொகைக்கு சற்று அவகாசம் கேட்டதால்
வட்டிக்கடை குண்டர்களுடன் காவல் துறையும் சேர்ந்து
அடித்து உதைத்துளனர்......
நமது கண்முன் நடக்கும் அநீதி
அனைத்து அடிமைத்தனங்களிலிருந்தும் மனித குலத்தை
மீட்க வந்த நீதியாளர் முகம்மது (ஸல் ) அவர்களை பின்பற்றும்
முஸ்லிம்களா நாம்.....?
உரக்கச் சொல்லாதீர்.....
பாதிக்கப்பட்ட மக்களின் வாயிலிருந்து
உமிழ் வந்து நமது முகத்தில் வி்ழப்போகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval