Saturday, March 19, 2016

டிராக்டருக்கான வாடகை பணத்தை கொடுக்காததால் பயங்கரம் உருட்டு கட்டையால் தாக்கி விவசாயி கொலை மற்றொரு விவசாயியை போலீஸ் தேடுகிறது

201603200105280059_Tractor-for-rentLacking-money-Terror--Scroll-thumb_SECVPF (1)
குண்டலுபேட்டை அருகே டிராக்டருக்கான வாடகை பணத்தை கொடுக்காததால் விவசாயி உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான மற்றொரு விவசாயியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.,:–
விவசாயி
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவரஷெட்டி. இவரது மகன் ராஜஷெட்டி (வயது 38). விவசாயி. அதேப் போல் குண்டலுபேட்டை தாலுகா பண்டிதாளபுரா அருகே ஹனூருகேரியை சேர்ந்தவர் தொட்ட ஷெட்டி (45). விவசாயியான இவர் தனது டிராக்டரை வாடகைக்கு விட்டு வந்தார்.
இந்த நிலையில் ராஜஷெட்டி, தொட்ட ஷெட்டியிடம் இருந்து வாடகைக்கு டிராக்டரை அடிக்கடி எடுத்து வந்துள்ளார். ஆனால் டிராக்டருக்கான வாடகை பணத்தை அவர் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மீது தொட்ட ஷெட்டி கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
கொலை
இதற்கிடையே நேற்று முன்தினம் ராஜஷெட்டி பண்டிதாளபுராவுக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் டிராக்டருக்கான வாடகை பணத்தை தொட்ட ஷெட்டி கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. அப்போது ஆத்திரமடைந்த தொட்ட ஷெட்டி, ராஜஷெட்டியை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜஷெட்டி, குண்டலுபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைதொடர்ந்து ராஜஷெட்டியை அடித்துக்கொன்றதாக தொட்ட ஷெட்டி மீது கொலை வழக்குப்பதிவு செய்து குண்டலுபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval