Showing posts with label இஞ்சி. Show all posts
Showing posts with label இஞ்சி. Show all posts

Friday, February 26, 2016

இஞ்சி


1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

Wednesday, September 30, 2015

சளியை என்ன சேதி என கேட்கும் இஞ்சி

 இஞ்சி         எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் ஜீரணிக்க வைக்கும்; பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரை பெருக்கிப் பசியைத் தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. 
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது, பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன், ஆகார குற்றங்கள் உண்டாவதையும் தடுத்து, உணவு எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.