Monday, November 30, 2015

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? மருந்தை தேடி அலைய வேண்டாம்...!

தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்...
பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்...
சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது...
சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்...
தொடர்ந்து செய்து வந்தால்.....
அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்....
{தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே....}

தயவு செய்து அதிகமாக பகிரவும்

Image result for important news imagesதயவு செய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே:- இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..... அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet" ஆகும். இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது..... அணுக வேண்டிய முகவரி :---- Cancer institute Adyar, East Canal Bank Road, Gandhi Nagar Adyar, Chennai-600020 Land Mark, Near Michael School. PHONE:--------- 044 -24910754 


Sunday, November 29, 2015

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் பரவலாக மழை; 5 நாட்களுக்கு நீடிக்கும்

ChennaiMeteorologicalஅந்தமான் அருகே மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 7ம் தேதி முதல் படிப்படியாக வலுவடைந்து கடலூர் மாவட்டத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

Wi-Fi தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகம் கொண்ட Li-Fi:


Image result for wifi imageஇணையத்தள இணைப்பை வயர் இல்லாமல் பயன்படுத்துவதற்காக ‘WiFi’ என்ற தொழில்நுட்பம் உள்ளது.
இதை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை வயர் இணைப்பு இல்லாமல் கணணி, செல்போன், மடிக்கணணி, லேப்லெட் போன்ற சாதனங்களில் இணையத்தள வசதிகளை பெற முடியும்.

வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் !




மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களில் மிகமுக்கியமானவைகளில் ஒன்று வெகுதூரத்தை விரைவில் கடந்துசெல்ல ஏதுவாக கண்டுபிடித்த இயந்திரங்களாகும்.

Saturday, November 28, 2015

இயற்கையை நாம் அழித்தால்…

rhi
தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாகவே, வடகிழக்கு பருவமழை வானத்தில் இருந்து பெருக்கெடுத்தோடும் அருவிபோல பொழிந்து, மண்மகளை கடல் மகளாக்கி பல சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த பேரழிவுக்கு என்ன காரணம் என்பதை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் நெற்றி அடியாக ஒரேவாக்கியத்தில் சொல்லிவிட்டார்.

பத்து கட்டளைகள்!

10-commandments வீடு வாங்கவிருக்கும் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட 10 கட்டளைகளை கடைப்பிடித்தால், காலம் முழுவதும் இனிய வரவாக வீடு திகழும்
1) வீடு வாங்குவதென்று முடிவு செய்து விட்டால், முதலில் உங்கள் பில்டர் வைத்திருக்கும் கால அட்டவணை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சரிபாருங்கள். பணியை ஆரம்பிப்பதற்கான சான்றிதழ்,

வற்றாத ஜீவனை காப்பாற்றுவோம் !

5614_n
ஆண்டின் அனைத்து நாட்களும் தண்ணீர் ஓடும் நதியாகவும் ,தமிழகத்தில் உருவாகும் நதியாகவும் இருப்பது நெல்லை சீமையில் உருவாகி ஓடும் தாமிரபரணி நதியாகும் .திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 86 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசன வசதியை தருவதோடு விருதுநகர் மாவட்டத்தையும் சேர்த்து மூன்று மாவட்ட மக்களுக்கும் குடிநீருக்கும் பயன்படும் ஜீவ நதியாக தாமிரபரணி நதி உள்ளது .

Friday, November 27, 2015

புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் நோய்கள்.

Risk-Factors-For-Heart-Disease-Smoking
சிகரெட்டுகளில் 4000 க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்களும், 200 வ

கையான விஷப்பொருட்களும், மற்றும் புற்றுநோயை உருவாக்கும் 60 ரசாயன பொருட்களும் அடங்கியுள்ளன. புகையிலை யாரையும் விட்டு வைப்பதில்லை.

காரைக்குடி மாணவர்களின் கலக்கலான மௌனக் கலைக் கண்காட்சி:

27-1448630675-karaikudi566
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 27.11.15 அன்று மௌனக் கலை கண்காட்சிப் போட்டிகள் நடைபெற்றது. இக்கண்காட்சி காரைக்குடி நகராட்சி தலைவர் கற்பகம் இளங்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைகழக பண்பாட்டு மன்றத் தலைவர் பேராசிரியர் டாக்டர். ஜோதிபாசு முன்னிலை வகித்தார்.

வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோ

மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.
இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இ­ஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப் பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார்.

Thursday, November 26, 2015

சேதுசமுத்திர திட்டம் தொடர்பான நிலைப்பாடு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரம் அவகாசம்

sethusamudramproject
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் திட்ட மிடப்பட்ட சேது சமுத்திர திட்டத் தால், ராமரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பாலம் இடிக்கப்படு வதற்கு சில அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

வேடந்தாங்கல் மழையோடு வந்த பறவைகள்

57சென்னைக்கு அருகாமையில், மதுராந்தகத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்கியுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிந்து வருகிறது.

தந்தைக்கு...!


Picture of father and son spending leisure time in park - stock photo* தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

* தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..

* தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்.

Wednesday, November 25, 2015

விண்ணுக்கு சென்றுவிட்டு மீண்டும் குறிப்பிட்ட இடத்தில் வந்து நிற்கும் ராக்கெட்கள்

Nose-cone - Technicians at NASA's Wallops Flight Facility
பொதுவாக விண்ணில் ஏவிய ராக்கெட் தன்னுள் உள்ள செயற்க்கைகோளை விண்ணில் நிறுத்தி விட்டு பின் கடலை நோக்கி விழுந்து நொறுங்கும். இதனால் மீண்டும் மீண்டும் கோடிகளை கொட்டி அரசுகள் புதிய ராக்கெட்டுகளை உருவாக்க வேண்டியுள்ளது.

சட்ட மாமேதை அம்பேத்கர்

851_n
இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியாக சிறப்பிக்கப்படும் டாக்டர்.B.R. அம்பேத்கர் முதன் முதலில் போட்டியிட எம்.பி. தொகுதி கொடுத்த கட்சி ” இந்திய யூனியன் முஸ்லிம் லீக்” ..!
முஸ்லிம் லீக் வேட்பாளராகவே போட்டியிட்டு முஸ்லிம் லீக் எம்.பி.யாக நாடாளுமன்றம் சென்று முதல் சட்ட அமைச்சர் பதவி பெற்றார் என்பது பொக்கிஷமான வரலாறு.

மூக்கு அடைப்பை விரட்ட ஆலோசனைகள் !!

Nose plug to dispel suggestions
பொதுவாக மழைக்காலங்களில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன.

Tuesday, November 24, 2015

50 குடும்பங்களுக்கு உணவளித்து அரவணைத்த பேருந்து ஓட்டுனர்

செம்மஞ்சேரி:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 50 குடும்பங்களுக்கு தன் சொந்த செலவில், நான்கு நாட்கள் உணவளித்த மாநகர பேருந்து ஓட்டுனரை, பகுதிவாசிகள் வெகுவாக பாராட்டினர்.
செம்மஞ்சேரி ஒன்பதாவது நிழற்சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம், 35; மாநகர பேருந்து ஓட்டுனர். வெள்ளத்தால் சூழப்பட்ட சுனாமி குடியிருப்பில், ௫௦க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கின.

மெய்_சிலிர்த்து_போவீர்கள்‬ அவசியம் படியுங்கள் இப்படி ஒரு ஆட்ச்சியா

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார்.
*நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்த போது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

Monday, November 23, 2015

படித்ததில்_பிடித்தது‬.....கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்…..!!!! வாழ்க்கை வசந்தமே

சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.
இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.
இந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள்.

மரண அறிவிப்பு


புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் நல்ல அபூபக்கர் என்ற  கலந்தர் மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும்செ .மு .மு . சேக்முகம்மது அவர்களின் மனைவியும் ,முகம்மது இலியாஸ் .முகம்மது இர்பான் ,முகம்மது இத்ரீஸ் இவர்களின் தாயாரும்

உலகின் எந்த மூலைக்கும் 4 மணி நேரத்தில் செல்லலாம்: ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் விமானம் தயார்


உலகின் எந்த மூலைக்கும் 4 மணி நேரத்தில் செல்லலாம்: ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் விமானம் தயார்உலகின் எந்த மூலைக்கும் நான்கே மனி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் நவீன ரக விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்து வருகின்றது.

Sunday, November 22, 2015

செரிமானமின்மையை போக்கும் எளிய பாட்டி வைத்தியம்

Stomach ache
• தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்தால் ‘சீரகக் குடிநீர்’ தயார். இந்த சீரகக் குடிநீரை தினமும் குடித்து வந்தால் எந்தவித செரிமானக் கோளாறுகளும் வராது.
• இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம் மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க செரிமானமின்மை சரியாகும்.

## சரித்திரம் படைத்து எழுச்சியோடு நடைபெற்ற துபை மண்டல மமக பேரவை கூட்டம்...

துபாயில்___மமக__விற்கு__ஏற்பட்ட__ மக்கள்_ அலை....பொதுச்செயலாளர் தமிமுன்_அன்சாரதலைமையை ஏற்று செயல்பட முடிவு.

மனிதநேய மக்கள் கலாச்சார பேரவை- துபாய் மண்டலத்தின் சார்பில் எழுச்சியோடு இறைவசனத்தோடு துபாய்- அல் நக்கிலில், அமீரக மமக பேரவை ஒருங்கிணைப்பாளர் பாசமிகு அண்ணன் மதுக்கூர் அப்துல் காதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

Saturday, November 21, 2015

அருமையான வீட்டுக் குறிப்புகள்!

617_n
ருசியாகவும், மணக்க மணக்க சமைப்பதற்காகவும், சமைக்கும் முன்பும் பின்பும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அருமையான டிப்ஸ்…
* தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.

எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் இருக்கைகளில் பெரிய டிவி திரை அறிமுகம்

index
பெரும்பாலான விமானங்களில்ல் பயணிகள் பொதுபோக்கும் விதமாக விமானங்களில் முன் இருக்கையின் பின்புறத்தில் வைக்கப்படும் திரைப்படங்களைப்பார்க்க வசதியாக சிறிய அளவிலான‌ ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டிருக்கும்.எமிரேட்ஸ் விமானங்களில் பெரிய அளவிலான டிவி திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!

Pain-Killers
இப்போதெல்லாம் அனைவரின் வீட்டிலும் ஓர் மருத்துவர் இருக்கிறார்கள். அது பொதுவாக அப்பா அல்லது அம்மாவின் உருவத்தில் இருக்கிறார்கள். என்ன உடல் வலி என்றாலும் உடனேயே வாயில் நுழையாத வார்த்தையை கூறி ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள். சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள்.

தீராத சளித் தொல்லைக்கு நிவாரணம்


பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.

Friday, November 20, 2015

காமராஜர்

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் .

இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்!

ல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில்,  கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன.

பாலைவனத்தில், ஒரு பகுதியை காட்டி

  
பாலைவனத்தில், ஒரு பகுதியை காட்டி, "நாளை முதல் இந்த இடம் உனக்கு சொந்தம்" என்று அமீரகவாசியிடம் கூறியது, அல் அய்ன் நகர முனிசிபாலிடி.

Thursday, November 19, 2015

'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'

Image result for kamarajar images
கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.
அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

ஊருக்கு மட்டும்தான் உபதேசமா.!?


பெரும்பாலும் நமதூர் பகுதிகளில் நாம் அனுதினமும் ஒருசிலரை பார்த்திருப்போம். வாய் ஓயாமல் அடுத்தார்களுக்கு ஏதாவது ஒரு உபதேசம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.உபதேசம் செய்வது ஒருவகையில் நல்ல விஷயம்தான்.மறுப்பதற்கில்லை. அதேசமயம் யாரொருவர் பிறருக்கு உபதேசம் செய்கிறார்களோ அந்த நபரும் ஓரளவுக்கு அவ்விசயத்தில் சரியாக கடைப்பிடித்து நடப்பவர்களாக இருக்கவேண்டும்.தாம் அந்த விசயத்தில் சரியாக இல்லாமல் அடுத்தவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்வாராயின் அதை யாரும் பெரும்பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.அவரை யாரும் மதிக்கமாட்டார்கள். மேலும் பல இழிவுச்சொல்லுக்கே ஆளாவார்கள்.

Wednesday, November 18, 2015

புற்றுநோய் பாதிப்பினை துல்லியமாகக் கணிக்கும் நவீன பரிசோதனை

breast_scan_640
உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயினை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு பரிசோதனை முறைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் வினைத்திறன் குறைவாகவே காணப்படுகின்றன.
இதன் காரணமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தற்போது மற்றுமொரு நவீன பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்

black-jamun-fruit
உடலில் இரத்தம் சுத்தமாக இல்லையெனில் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மற்றும் வயிறு சார்ந்த கோளாறுகள், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாக நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
உங்கள் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிக கடினமானக் காரியம் எல்லாம் இல்லை.

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!

1111
ஷாக்கிங் தகவல்கள்… சமாளிக்க 10 கட்டளைகள்!அவேர்னஸ் ‘‘குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!’’ என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாகப் பேசுகிறார்…

Tuesday, November 17, 2015

அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்... எண்ணெய்!

ஆறாம் திணை - மருத்துவர் கு.சிவராமன்
இந்தியாவின் முக்கால்வாசி மரணங்களுக்கு, சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட தொற்றாநோய்க் கூட்டம் காரணமான பிறகு, உணவில் எல்லோரையும் அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்... எண்ணெய்!
''மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க. அப்புறம் ரீஃபைண்டு பண்ண ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க. அடுத்து, சன்ஃப்ளவர் ஆயிலுக்கு மாறச் சொன்னாங்க. அப்புறம், தவிட்டு எண்ணெய். இப்போ ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில். எது டாக்டர் சரியான எண்ணெய்?'' - இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை.

2 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு டிவி,உள்ளிட்ட பொருட்களுக்கான சுங்க வரியை நீக்க வலியுறுத்தல்

துபாய்: வெளிநாடுகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து  விடுமுறையில் நாடு திரும்பும் தொழிலாளர்கள் கொண்டு வரும் டிவி,உள்ளிட்ட பொருட்களுக்கான சுங்க வரியை நீக்க வேண்டும்.

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

Monday, November 16, 2015

வீட்டில் நாம் வைத்திருக்கும் கருப்பு நிற தண்ணீர் டேங்கால் ஏற்படும் ஆபத்துகள்…

27-10-2010-1063-sintex
அரபு நாடுகளில் நம் நாட்டைவிட வெயிலின் கொடுமை அதிகமாகவே இருக்கும். நான் கடல் நீரை குடிநீராக்கும் கம்பெனி ஒன்றில் பணி புரிகிறேன்.
இங்கே வெயிலின் தாக்கத்திலிருந்து குடிநீரை பாதுகாக்க உபயோகப்படுத்தப்படும் தண்ணீர் தொட்டிகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன.

கணணியில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டறிய விண்டோஸ் புதிய வசதி

windows-password
நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் கணனியில் விண்டோஸ் நிறுவப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை உங்கள் கணனியில் எவ்வாறான பிரச்சினைகள் தோன்றியிருக்கும் என்பதனை அறிந்து கொள்ள விண்டோஸ் இயங்குதளத்திலேயே ஒரு வசதி தரப்பட்டுள்ளது.

Sunday, November 15, 2015

சர்க்கரை நோயால் வினாடிக்கு 6 பேர் இறப்பு: டாக்டர் தகவல்

diabetes
உலக அளவில் சர்க்கரை நோயால் வினாடிக்கு 6 பேர் உயிரிழப்பதாக சர்க்கரை நோய் நிபுணர் தெரிவித்தார். தேனி மாவட்டத்தில் சர்க்கரை நோய் எதிர்ப்பு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. சர்க்கரை நோய் குறித்து சிறப்பு சிகிச்சை நிபுணரான டாக்டர். ராஜ்குமார் கூறியதாவது: சர்க்கரை நோயானது முதல் பருவம், இரண்டாம் பருவம்,

2016-ல் அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் ப்ளூடூத்

bluetooth
கம்பி இல்லாத் தொழில்நுட்பமான (Wireless) ப்ளூடூத்தில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை மேம்படுத்த வயர்லெஸ் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அடையாள அட்டையில்லாமல் ஐகோர்ட்டில் இன்று முதல் யாரும் நுழைய முடியாது

Madras High Court
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் இன்று முதல், அடையாள அட்டை இல்லாமல் யாரும் நுழைய முடியாது. ‘சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை மேற்கொள்ள வேண்டும்’ என, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Saturday, November 14, 2015

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியத்தை நிறுத்த மத்திய அரசு திட்டம்

24-venkaiah-naidu
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.
வெங்கையா நாயுடு பேச்சு
ஐதராபாத் நகரில் ஆந்திரா–தெலுங்கானா வர்த்தக சபை நேற்று ஏற்பாடு செய்து இருந்த விருது வழங்கும் விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பாராளுமன்ற விவகார துறை மந்திரி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

புறம்பேசுதல் நல்ல பழக்கமாகுமா.!?

 அதாவது அடுத்தவன் குறைகாண்பவன் அரை மனிதன் தன்குறை உணர்பவன் முழுமனிதன் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் இப்பழமொழி பெரும்பாலும் புறம்பேசும் மனிதர்களுக்கே மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பார்க்கும்போது தன்னிடத்தில் பல குறைகளையும் வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் குறைகளை அடுத்தவர்களின் பிரச்சனைகளை, அடுத்தவர்களின் போக்குகளை ஆராய்ந்து அதைப்பற்றி புறம்பேசுவது என்பது எப்படி நல்ல பழக்கமாக இருக்கமுடியும்.?

Friday, November 13, 2015

மருத்துவ கொள்ளையர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு

உண்மை இரண்டு நிமிடம் படியுங்கள் கத்தி படத்தை 200 ருபாய் கொடுத்து பார்க்கும் மகராசனுங்கலே இந்த மருத்துவ கொளையர்களை பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் இதற்காக நான் கடந்த 6 வருடமாக அனைத்து விபசார ஊடகங்களையும் அணுகி கேவலப்பட்டு அசிங்கப்பட்டும் ஏழை மக்களின் உயிர் காக்க போராடி கொண்டு உள்ளேன் இந்த பல்லடம் சிவகுருநாதன் 9952432752 தயவு கூர்ந்து அனைவரும் பகிருங்கள் உங்களை நான் பணம் கேட்கவில்லை பகிரத்தான் வேண்டுகிறான் ...
மருத்துவ கொள்ளையர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு

இதோ ஒரு எம்.பி யின் அரசு வருமான கணக்கு

The widely acknowledged fact that non-resident Indians (NRIs) are ...மாதச்சம்பளம் - 50000
இதர வருமானம் - 45000
மாத அலுவலக. - 45000
செலவு
மகிழுந்து பயண - 48000
செலவு
( ரூ 8 * 6000 km )