ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.
வெங்கையா நாயுடு பேச்சு
ஐதராபாத் நகரில் ஆந்திரா–தெலுங்கானா வர்த்தக சபை நேற்று ஏற்பாடு செய்து இருந்த விருது வழங்கும் விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பாராளுமன்ற விவகார துறை மந்திரி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார்.