10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க!
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Thursday, January 30, 2014
Wednesday, January 29, 2014
எங்க முதலாளி !? தங்க முதலாளி !?
முதலாளி என்ற வார்த்தையை கேட்கும் போதே ஒரு தொழிலாளியின் மனதில் தனி மரியாதை, பயம், பதஸ்ட்டம், படபடப்பு எல்லாம் ஏற்படும். காரணம் அரசு வேலைக்கு விண்ணப்பித்து அலையாய் அலைந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காமல்,ஏங்குபவர்களுக்கும், கல்வியறிவில் பின்தங்கி இருப்பவர்களுக்கும் நடுத்தர,ஏழைகளுக்கும் தனியார் நடத்தும் கம்பெனி பெரிய முதலாளிகளிலிருந்து சிறுதொழில் செய்து வரும் சிறிய முதலாளிமார்கள் வரை அத்தனை வகை முதலாளிகளும் அவரவர் தகுதிக்கான வேலை வாய்ப்பைக் கொடுத்து வருகின்றனர். அப்படிக் கொடுக்கும் வாய்ப்பைக்கொண்டுதான் பலரின் குடும்பங்கள் கொஞ்சம் நிம்மதியுடன் வறுமையிலிருந்து விடுபட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
Tuesday, January 28, 2014
Monday, January 27, 2014
இடஒதுக்கீடு பற்றி ஷம்சுதீன் காஸிமியின் உளறல்
ஏக இறைவனின் திருப்பெயரால்....
மோடியை விட தரம் தாழ்ந்த கா(வி)ஸிமி.
இஸ்லாத்தில் இடஒதுக்கீடு என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கா மஸ்ஜிதில் ஷம்சுதீன் காஸிமி குத்பா உரை நிகழ்த்தினார் இந்த தலைப்பில் உரைத் தொடங்கியதும் ஜனவரி 28ல் நடைபெறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் இடஒதுக்கீடுப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவார் என்று பலரும் நினைத்திருப்பர்.
காரணம் இந்தப் போராட்டத்தை ஒருசில விஷமிகளைத் தவிற பிற ஜமாத்தில் உள்ளவர்கள் கூட அதிகமானோர் ஆதரிக்கவேச் செய்கின்றனர் என்பதால் அதிகமான மக்கள் ஆதரவாகப் பேசுவார் என்றே நினைத்திருப்பர்.
ஆனால் யானை தனது தும்பிக்கையின் மூலம் மண்ணை அள்ளித் தலையில் கொட்டிக் கொள்வதைப்போல் அவருடைய உரை அமைந்திருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு மொத்த முஸ்லீம் சமுதாயத்தையும் தாழ்த்திப் பேசிவிட்டு தன்னையும் தாழ்த்திக் கொண்டார்.
மோடியை விட தரம் தாழ்ந்த கா(வி)ஸிமி.
இஸ்லாத்தில் இடஒதுக்கீடு என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கா மஸ்ஜிதில் ஷம்சுதீன் காஸிமி குத்பா உரை நிகழ்த்தினார் இந்த தலைப்பில் உரைத் தொடங்கியதும் ஜனவரி 28ல் நடைபெறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் இடஒதுக்கீடுப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவார் என்று பலரும் நினைத்திருப்பர்.
காரணம் இந்தப் போராட்டத்தை ஒருசில விஷமிகளைத் தவிற பிற ஜமாத்தில் உள்ளவர்கள் கூட அதிகமானோர் ஆதரிக்கவேச் செய்கின்றனர் என்பதால் அதிகமான மக்கள் ஆதரவாகப் பேசுவார் என்றே நினைத்திருப்பர்.
ஆனால் யானை தனது தும்பிக்கையின் மூலம் மண்ணை அள்ளித் தலையில் கொட்டிக் கொள்வதைப்போல் அவருடைய உரை அமைந்திருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு மொத்த முஸ்லீம் சமுதாயத்தையும் தாழ்த்திப் பேசிவிட்டு தன்னையும் தாழ்த்திக் கொண்டார்.
Sunday, January 26, 2014
மரண அறிவிப்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwAgf1QFzPddFSP0tAbx2oXasC-h_BZIdRrVM9vcyAPc_nxmMezwP-YIqK79eh_aCKuf2N59Mzb9A7QJEsU8KuvECzrwTwgahfQ1aMWe-ONRW10yr6nhEUXLc7drf7V4rxHCfnHWtcxfdI/s320/Santhook.jpg)
ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் மீரான் மரைக்காயர் அவர்களின் மகனும் அப்துல் ராஜக் ,தையூப், முஹம்மது இப்ராகிம் ,இவர்களின் சகோதரரும் AR. அப்துல் லத்தீப் ,F சைபுதீன் ,H அஷ்ரப் இவர்களின் மாமனாருமாகிய நெய்னா முகமது அவர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியாவின் தலைநகர் சாக்ரமண்டோவில் இன்று காலமாகி விட்டார்கள் ,இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் அன்னாரின் மறுமைவாழ்வுக்காக துவா செய்வோமாக
தகவல் ;H சேக் அலி
கலிபோர்னியா,U .S .A .
போலியோவில் இருந்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய மாமனிதரை மறந்துவிட்ட ‘நன்றி கெட்ட உலகம்’
‘போலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ நோயில் இருந்து சிறு பிள்ளைகளை காப்பாற்றி, வெற்றி பெற்ற நாடுகளின் முதல்தரப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
Saturday, January 25, 2014
சிறுபான்மைச் சமுதாய மாணவர்களுக்கு இலவச IAS பயிற்சி
வருங்கால IAS அதிகாரிகளே......!!
அன்பு முகநூல் சகோதரர்களே....
சமுதாய நலன் சார்ந்த இந்த நல்ல
செய்தியை பலருக்கும் கொண்டு செல்ல (Share
செய்து அல்லது தனிப்பதிவாக போட்டு) உங்கள்
முகநூல் Timeline மூலம் உதவுங்கள்.
சிறுபான்மைச் சமுதாய மாணவர்களுக்கு இலவச
IAS பயிற்சி அளிக்க மத்திய
அரசு நிதி ஒதுக்கியுள்ளது. உரிய காலத்தில்
இது பயன்படுத்தப்படாவிட்டால் வழக்கம்போல
திரும்பிச் சென்று விடும்..
பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதில்
சேரத்தகுதி உடையோர்.
சென்னை மாணவர்களுக்கு மாதம் ரூ1000
வெளியூர் மாணவர்களுக்கு ரூ2000
உதவித்தொகையும் உண்டு..
ஆர்வமுடையோர் நமது கல்வி வழிகாட்டல்
ஒருங்கிணப்பாளர் பேரா.எம்.எஃப்.கான் அவர்களைத்
தொடர்பு கொள்க.
அலைபேசி எண்கள் : 9840259611, 9677109759.
தகவல் : பேராசிரியர் ஹாஜா கனி
Source : சமுதாய உரிமை FB Page,
தக்கலை கௌஸ் முஹம்மது
courtesy Facebook &
![](https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/1118973_667799415_768835890_q.jpg)
Mohideen Abdul Kader
New York U.S.A
Thursday, January 23, 2014
2005க்கு முன் வெளியான ரூபாய் நோட்டுகள் செல்லாது: ஏப்ரல். 1 முதல் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம்
ஜனவரி 23: வரும் 2014 மார்ச் 31க்குப் பிறகு, 2005க்கு முன் வெளியிடப்பட்ட எல்லா கரன்சி தாள்களையும் ரிசர்வ் வங்கி வாபஸ் பெறுகிறது. இதன்படி 2005க்கு முன் வெளியான ரூ. 500, ரூ. 1000 நோட்டு உள்ளிட்ட எல்லா கரன்சி நோட்டுகளும் புழக்கத்திலிருந்து வாபஸ் பெறப்படும்.
கறுப்புப்பணம், கள்ள நோட்டுகளை கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.
இந்த நோட்டுகளை வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். மறு அறிவிப்பு வரும் வரை இந்த வசதி தொடரும் என ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005க்கு முன் வெளியான நோட்டுகளின் பின்பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு விவரம் இருக்காது.
2005க்குப் பிறகு வெளியிடப்பட்ட நோட்டுகளின் பின்பக்கத்தில் கீழ்பகுதியின் நடுவில் சிறிய வடிவில் கண்ணுக்குத் தெரியும்படி அச்சிடப்பட்ட ஆண்டின் விவரம் இருக்கும்.
இதை வைத்து அந்த நோட்டுகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நோட்டுகளை வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். மறு அறிவிப்பு வரும் வரை இந்த வசதி தொடரும் என ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005க்கு முன் வெளியான நோட்டுகளின் பின்பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு விவரம் இருக்காது.
2005க்குப் பிறகு வெளியிடப்பட்ட நோட்டுகளின் பின்பக்கத்தில் கீழ்பகுதியின் நடுவில் சிறிய வடிவில் கண்ணுக்குத் தெரியும்படி அச்சிடப்பட்ட ஆண்டின் விவரம் இருக்கும்.
இதை வைத்து அந்த நோட்டுகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
courtezy Facebook &
muthupet.org news
muthupet.org news
Wednesday, January 22, 2014
மரண அறிவிப்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwAgf1QFzPddFSP0tAbx2oXasC-h_BZIdRrVM9vcyAPc_nxmMezwP-YIqK79eh_aCKuf2N59Mzb9A7QJEsU8KuvECzrwTwgahfQ1aMWe-ONRW10yr6nhEUXLc7drf7V4rxHCfnHWtcxfdI/s320/Santhook.jpg)
மேட்டுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அசனா மரைக்காயர் ,அவர்கள்
மகனும்,மர்ஹும் அபூபக்கர் ஹாஜி முகம்மது சாலிஹ்(அஜ்மீர் ஸ்டோர் ),அப்துல் வஹாப் ,அபுல் ஹசன், இவர்களின் சகோதரரும் ,ஜமால் முகம்மது ,முகம்மது அசன்.இவர்களின் தகப்பனாரும், சாகுல் ஹமீது அவர்களின் மாமனாருமாகிய M.A.அப்துல் ஜப்பார் அவர்கள் சென்னையில் காலமாகிவிட்டார்கள் ,இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் அன்னாரின் மறுமைவாழ்வுக்காக துவா செய்வோமாக
தகவல்;N.அமானுல்லாஹ்
நியூ யார்க் U.S.A
Tuesday, January 21, 2014
உலகின் முதலாவதாக நிகாப் அணிந்து விமானம் செலுத்திய பெண் விமானி
மாஷா அல்லாஹ்!!! உலகின் முதலாவதாக நிகாப் அணிந்து விமானம் செலுத்திய பெண் விமானியும் கின்னஸ் உலக சாதனையாளருமான பாகிஸ்தானின் Capt. Pilot Shahnaz Laghari. இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது என்று கூச்சல் போடும் போலிகளுக்கு இது சமர்ப்பணம் நன்றி I Love Prophet Muhammad pbuh அதிகம் பகிர்வோம்
அணைவருக்கும் அறியச்செய்வோம்
courtesy ;Facebook
Sunday, January 19, 2014
போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம்
நாடு முழுவதும் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடந்தது.
தமிழகத்தில் மட்டும் இதற்காக 43,051 சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், சமுதாய நலக் கூடங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், முக்கிய இடங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் என முக்கிய இடங்களில் இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும். பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை உறுதி செய்ய இந்த முகாம் நடத்தப்படுகிறது.
சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
2வது தவணையாக மீண்டும் பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தால் தவறாமல் சொட்டு மருந்து கொடுத்து விட்டு வாருங்கள்.
தமிழகத்தில் மட்டும் இதற்காக 43,051 சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், சமுதாய நலக் கூடங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், முக்கிய இடங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் என முக்கிய இடங்களில் இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும். பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை உறுதி செய்ய இந்த முகாம் நடத்தப்படுகிறது.
சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
2வது தவணையாக மீண்டும் பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தால் தவறாமல் சொட்டு மருந்து கொடுத்து விட்டு வாருங்கள்.
தகவல்;N.K.M.புரோஜ்கான்
அதிரை
அதிரை
Saturday, January 18, 2014
கவி. கா.மு. ஷெரிப் அறிஞரை, கவிஞரை, ஞானியை எங்கே நான் பார்ப்பேன்?. வீரபாண்டியன்
எங்கள் திருவாரூர் மாவட்ட வேலுக்குடிதான் அந்தக் கவிப்பறவையின் தாய்மடி. 1914 செப்டம்பர் 11-ல் இந்த பூமியில் தரையிறங்கிய அந்தக் கவிதை ராஜாளி, தனது வசீகரச் சிறகுகளால் இலக்கிய வானத்தையும் ஞான வானத்தையும் ஒன்றாய் அளந்தது.
இலக்கிய தபோவனத்திற்குள் இருந்தபடியே ஞானத்தை அடைந்தவர் ஷெரிப். அவரது உயரம், சகல உயரங்களையும்விட உயரமானது.
கா.மு. ஷெரிப், அன்றைக்கு இருந்த பிரபல பட நிறுவனமான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் செல்வாக்கோடு திகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் திருவாரூரில் இருந்த இளைஞர் கலைஞரை, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அழைத்துச்சென்றதே கவிஞர் ஷெரிப்தான்.
ஷெரிப், திரையில் தீட்டிய காவியப் பாடல்கள் திரையுலகின் திருப்புமுனைப் பாடல்களாகும்.
“ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ இந்தத் திரைப்பாடல், இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் நம் சிந்தையில் சந்தனம் பூசும்! இவர் புலவர் மட்டுமல்லர்; மகத்தான மனிதர். சுதந்திரப் போராட்டத் தியாகி. இவரும் என் தந்தையாரும் சிறந்த நண்பர்கள். நண்பனின் பிள்ளை என்பதால் என்னை அவர் ஆசையும் அன்புமாய் அரவணைத்தார்.
அன்புமழை பொழிந்து தன் வாழ்நாள் நெடுக என்னை இதயமாற நனைத்தார்.
நான் அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது அன்றாடம் அவரோடு அணுக்கமாயிருக்கும் பேறினைப் பெற்றேன்.
அந்த அணுக்கம், மானுட வாழ்வின் மகத்தான பகுதிகளை என்மீது வெளிச்சம் போட்டு விளங்க வைத்தது. அவர் மதம் கடந்த மனிதர். ஆனால் மதக் கோட்பாடுகளை உள்ளுக்குள் வாங்கி, அதன் நடைமுறை வடிவமாய் நடந்து காட்டியவர்.
புத்தகத்தில் பேசப்படும் தத்துவங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதென்பது சாத்தியமேயில்லை என்பார்கள் சராசரிகள். அது, சாத்தியம்தான் என்பதற்கான கண்கண்ட சத்திய சாட்சியங்கள்தான் கவி கா.மு. ஷெரிப் போன்ற கருணாமூர்த்திகள்.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்தின் மனசாட்சியின் காவலராய் இருந்தவர். பட அதிபர் எம்.ஏ. வேணுவின் இதயத்தில் கொலுவிருந்தவர். இத்தனை வாய்ப்புகளை வைத்து கோடிக்கு அதிபதியாய் கோபுரத்தில் உட்கார்ந்திருக்க முடியும். ஆனால், கடைசிவரை வாடகை வீட்டில் குடியிருந்தார். “உங்களுக்குத்தான் முதலமைச்சர் மிகவும் வேண்டியவராயிற்றே. ஒரு வீடு கேளுங்களேன்!’ என்றனர் நண்பர்கள். “நான் வல்ல இறைவனையன்றி வேறு எவரிடமும் கையேந்த மாட்டேன்!’ என்றார் அவர்.
சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானத்தின் ஐம்பதாவது பொன்விழா.
விழாவில் அவருக்கு ஐம்பது பவுன் பரிசளிப்பதென்று நண்பர்கள்கூடி முடிவு செய்தனர்.
விழாக் குழுவின் முன்னோடியாய் நின்று உழைத்தார் ஷெரிப். விழா நெருங்குகிற நாள்வரை பாதி அளவுக்குமேல் பவுன் தேறவில்லை. பார்த்தார் ஷெரிப்; “சொன்னது சொன்னபடி சொர்ணத்தைக் கொடுத்துவிட வேண்டும்’ என்று உறுதி பூண்டார். தன் வாழ்க்கைத் துணைவியின் மேனியில் மின்னிக்கிடந்த பொன்நகைகளைக் கழற்றி எடுத்துப் பாதியளவோடு, மீதியளவையும் சேர்த்து, ஊருக்கும் உலகுக்கும் தெரியாமல் உவந்தளித்தார் அந்த உத்தமர். பின்னர் அந்தத் தொகைதான் கார் நிதியாக மாற்றி, சிலம்புச் செல்வர் பயணம் போகும் “பியட்’ காராகப் பரிசளிக்கப்பட்டது.
“அல்லாஹ்வின் தூதர் ஓர் அழகிய முன்மாதிரி’ என்று திருவசனம் தெரிவிக்கிறது.
அந்த முன்மாதிரியைப் பின்பற்றிய இவரும் ஒரு முன்மாதிரிதான். “வலக்கையில் சூரியனையும், இடக்கையில் சந்திரனையும் தந்தாலும் நாம் நமது கொள்கையை விடப்போவதில்லை’ என்னும் நாயகத்தின் வார்த்தைகளுக்கு இவரும் ஒரு உன்னத இலக்கணம்.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் பிற சமயத்தாரையும் மதித்துப் போற்றக்கூடிய பக்குவமான இதயம் கொண்டவர் ஷெரிப்.
இங்கிருக்கும் இஸ்லாமியர்கள், தங்கள் தனித்தன்மையைப் பேணுவதோடு இங்கே வாழும் தமிழ் மக்களோடு இதயம் ஒன்றி வாழவேண்டும் என்று சமத்துவத்தை போதித்தவர் அவர்.
புலால் சாப்பிடுவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்றபோதும், கடைசிவரை சைவச் சாப்பாட்டையே உண்டுவந்தார். வள்ளலாரின் காருண்யநெறி அவரை ஆரத்தழுவியிருந்தது.
அவர் காங்கிரஸில் இருந்த நாட்களில் வெளியூர் கூட்டங்களுக்குச் செல்ல நேரும்போதெல்லாம், அங்கே ஆடம்பரமான விடுதி அறைகளில் தங்கமாட்டார். கட்சிப் பிரமுகர்களின் இல்லங்களிலேயே தங்கிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடைசிவரை எளிமையின் புத்திரராகவே திகழ்ந்தார்.
சீறாப்புராண சொற்பொழிவாற்றத் தொடங்கிய பிறகு, பிரமுகர்களின் இல்லங்களையும் தவிர்த்து, பள்ளிவாசல்களில் தங்குவதையே வழக்கமாக ஆக்கிக்கொண்டார். காரணம் அணுவளவும் மனதில் இறை எண்ணத்தைத் தவிர, பிற எண்ணங்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக தனக்குத்தானே வேலி போட்டுக்கொண்டு சுதந்தரமாக வாழ்ந்த ஞானவிருட்சம் அவர்.
சீறாப்புராண சொற்பொழிவிற்காக அவர் மீண்டும் மீண்டும் அந்தப் புனித நூலையே படித்துக்கொண்டிருப்பார். கண்ணாடி அணிந்தபோதும், அவரது கண் பார்வை, படிக்கப் போதுமானதாக இருக்கவில்லை. எனவே ஒரு பூதக்கண்ணாடியை வலது பக்கக் கண்ணாடிக்குக் கீழே வைத்துக்கொண்டு ஆழ்ந்து படிப்பார். இது அவரது ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் உன்னத உதாரணம்.
சைவத்தமிழ் அறிஞர்களைவிடவும் புராண, இதிகாச, காவியங்களில் முழுக்கத் தோய்ந்திருந்தவர் கவி. கா.மு. ஷெரிப். ஒருமுறை சைவத்தமிழ் அறிஞரான அ.ச. ஞானசம்மந்தனார், கவிஞர் ஷெரிப்பைப் பார்க்க வந்திருந்தார். அப்போது ஷெரிப்பின் இரண்டு கைகளையும் ஆசையாகப் பற்றித் தனது கண்களில் ஒற்றிக்கொண்டார். இதை வியப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் அ.ச.ஞா, “தம்பி, நாங்கள் பெற்ற அறிவு, படித்துப் பெற்ற அறிவு. ஆனால் இவருடைய ஞானம், இறைவன் கொடுத்த கொடை. இவர் பூவாது காய்க்கும் மரம்’ என்று நெகிழ்ந்து சொன்னதை இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது.
ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தோடு முரண்பாடு ஏற்பட்டபோது, கா.மு. ஷெரிப், பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸில் சேர முடிவெடுத்தார். காமராஜரோ, கவிஞர் ஷெரிப்பின் மீது அளவுகடந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். எனவே ஷெரிப், கட்சியில் இணையும் விழாவை தடபுடலாக நடத்தத் தீர்மானித்தார்.
ஆனால் இதற்கெல்லாம் இடம்தராமல், திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் காமராஜரின் இல்லத்திற்கே கிளம்பிவிட்டார் ஷெரிப். இந்தத் தகவல் அறிந்த பெருந்தலைவர் காமராஜர் அவர் வரும் வரை வாசலில் நின்று காத்திருந்து, இரு கைகளையும் நீட்டி “உங்களை எப்படி எப்படியோ வரவேற்கணும்னு நினைச்சேன்’ என்று ஆரத்தழுவிக்கொண்டார்.
கவி கா.மு. ஷெரிப்போ “நீங்கள் வாசல்வரை வந்து வரவேற்றது, தமிழ்நாடே வரவேற்றது போல’ என காமராஜரின் ஆதங்கத்தை போக்கினார். காமராஜரோ அவர் கையைப் பிணைத்து உள்ளே அழைத்துச்சென்றார்.
அப்போது கவி. கா.மு. ஷெரிப் “பிணைந்த இந்தக் கைகள், பிணைந்ததுதான். இனி எப்போதும் பிரியாது. எனக்கு அரசியலில் இனி எந்தத் தலைவரும் இல்லை’ என்று தனது பூரிப்பை வெளிப்படுத்தி பெருந்தலைவரையும் பூரிப்பில் ஆழ்த்தினார்.
ஒருமுறை எல்லீஸ் சாலையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கவி கா.மு. ஷெரிப் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போது ஒரு இஸ்லாமிய வர்த்தகப் பிரமுகரும் அவரைப் பார்க்க வந்திருந்தார். அவர் தோல் தொழிற்சாலை வைத்திருந்தார் என்பதாக நினைவு.
வந்தவர் ஒரு கவரில் ரூபாய் நோட்டுக்களைப் போட்டு கவிஞரிடம் கொடுத்தார். கவிஞரோ, அதை அப்படியே அவரது பையிலேயே திருப்பிச் செருகி, “வந்தீங்க. பார்த்தீங்க. போய்ட்டு வாங்க. இதைக் கொடுத்து என்னை மேலும் சீக்காளி ஆக்கிடாதீங்க’ என்று அவருக்கு விடைகொடுத்துவிட்டார். அந்த சமயத்தில் கவிஞரிடம் பத்து ரூபாய்கூட இருக்கவில்லை.
அவர் போனதும் கவிஞரிடம், “அய்யா, அவர் அன்போடு கொடுத்த பணத்தை வாங்கியிருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பாரே’ என்றேன். கவிஞரோ “இவர் கொடுப்பது ஹராமான(பாவமான) பணம். இதை நான் வாங்கினால் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’ என்றார். வறுமையிலும் அவரிடமிருந்த செம்மையைப் பார்த்து சிலிர்த்துப்போனேன்.![kamuserf02]()
சென்னை வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்த நான், சிங்கப்பூர் வானொலிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். சிங்கப்பூர் புறப்படுவதற்குமுன், என் ஞானகுருவான கவி கா.மு. ஷெரிப் அவர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றேன். அன்போடு விசாரித்தார். பெரியவர்களிடம் ஆசிபெறும் முறைகளின்படி, அவரது இரண்டு திருவடிகளையும் தொட்டு வணங்கினேன்.
பதறிப்போன கவிஞர், “இஸ்லாத்தில் அடுத்தவர் கால்களைத் தொட அனுமதி இல்லை. உனக்குத் தெரியும்தானே’ என்றார். பின் அன்போடு என் உச்சந்தலையில் கைகளை வைத்து, ஏறத்தாழ ஏழு நிமிடங்களுக்கு குர்ரானின் வசனங்களை ஓதி வாழ்த்தினார். அது நான் பெற்ற பேறு.
பின்னர், “எப்போது திரும்பி வருவாய்? ஆறு மாதம் ஆகுமா? ஒரு வருடம் ஆகுமா?’ என்று அன்பொழுகக் கேட்டார். அதில் மீண்டும் பார்க்க முடியுமா என்கிற பரிதவிப்பு இருப்பதை என்னால் உணரமுடிந்தது. “வாய்ப்பு அமைகிறபடி வருவேன் அய்யா. நான் வரும்போது நீங்கள் நல்லபடியா இருப்பீங்கய்யா’ என்றேன்.
ஒரு கணம் நிதானித்த கவிஞர் “அதை இறைவன் தீர்மானிக்கணும். பொழச்சிக்கிடந்தா பார்போம்’ என்றார். பின்னர் சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கு என்னை அறிமுகம் செய்து ஒரு கடிதம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு, “வர்றேங்கய்யா’ என வணங்கிவிட்டு விடைபெற்றேன். அது கடைசி விடைபெறுதல் ஆகிவிட்டது.
சிங்கப்பூர் வானொலியில் “இரவுப் பூங்கா’ என்ற தலைப்பில் நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி அங்கு ஏகப் பிரபலம். ஒருநாள் அந்த நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்த போது, கவி கா.மு. ஷெரிப் மறைந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என் மனதில் தோட்டாக்களைப் பாய்ச்சியது. இருந்தும் கவி கா.மு. ஷெரிப் அவர்களின் பாடல்களையும் அவரது பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களையும் கலந்து கொடுத்து அவருக்கு அஞ்சலி செய்தேன்.
அவரது “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா…’ என்ற பாடலை ஒலிபரப்பியபோது, பல வாசகர்கள் தொலைபேசியில் வந்து கதறியழுதார்கள். கடல் கடந்த தமிழர்களையும் கலங்கிக் கதறவைத்த மரணம், அவரது மரணம்.
கவி கா.மு. ஷெரிப்பிற்கு இரங்கல் கூட்டத்தை சிங்கப்பூரில் இருக்கும் பென்கூலன் ஸ்ட்ரீட் பள்ளிவாசலில், தமிழ் முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதிலே என்னை உரையாற்ற வைத்தனர். என்மீது அளவுகடந்த அன்புகாட்டி வந்த கவி. கா.மு. ஷெரிப்பிற்கு, நான் கண்ணீர் வார்த்தைகளால் அஞ்சலி செய்தேன்.
கவி கா.மு. ஷெரிப் எனக்கு ஞானகுருவாக வாய்த்தவர். திருக்குர்ரானுக்குள் என்னை பரவசத்தோடு பிரவேசிக்க வைத்தவர். அதில் இருக்கும் இறை வசனங்களை எனக்குப் போதித்து சுதி சுத்தமாக என் மனதில் அவற்றைப் பதியவைத்தவர். என் மனதை நன்னெறிப்படுத்தியவர். இன்றும் என்னுள் இருந்து வழிகாட்டுகிறவர் அவர்தான். இனி அவர்போல ஒரு அறிஞரை, கவிஞரை, ஞானியை எங்கே நான் பார்ப்பேன்?
-வீரபாண்டியன்
தகவல்;சவ்க்கத் அலி
BOSTON U.S.A. குறிப்பு/ எனது முன்னோர்கள் அண்ணாவியார்
புலவர்கள் இயற்றிய அரிய பொக்கிஷங்களை
ஏற்றுச்சுவடிகளிலிருந்து புத்தகவடிவில் கொண்டுவர எனது பாட்டனார் மர்ஹூம் ஹாஜி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களோடு சேர்ந்து முயற்ச்சி செய்து அணிந்துரையும் வழங்கினார்கள் கவி கா.மு. ஷெரிப் எண்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்
அப்துல் வாஹித் அண்ணாவியார்
புலவர்கள் இயற்றிய அரிய பொக்கிஷங்களை
ஏற்றுச்சுவடிகளிலிருந்து புத்தகவடிவில் கொண்டுவர எனது பாட்டனார் மர்ஹூம் ஹாஜி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களோடு சேர்ந்து முயற்ச்சி செய்து அணிந்துரையும் வழங்கினார்கள் கவி கா.மு. ஷெரிப் எண்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்
அப்துல் வாஹித் அண்ணாவியார்
அதிரை தக்வா பள்ளி அருகில் TNTJ பொதுக்கூட்டம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6qaNM3x-FBG2vwMPvS3q7A7cJig9gZVJmoHi8tbFtZpJSxHWmD-F0IDn7Xnb5wrr-Flx5dfFkMruxn3x6bHzBrvXrud09-QVvw1J7bMiTJMelSKKJ9Bqln1RKEQVB5kLRA4PNLAC3ykw/s400/20140115_204723.jpg)
இன்று மாலை நமதூர் தக்வா பள்ளி அருகில் TNTJ பொதுக்கூட்டம் !நடைபெற்றது.
கூட்டத்திற்கு அதிரை அன்வர் அலி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார் இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறை நிரப்பும் போராட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும், சையது இப்ராஹிம் அவர்கள் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி ! என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன இறுதியாக அதிரை நகரTNTJ இணைச்செயலாளர் சுலைமான் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நடைபெற்றது
தகவல்;N.K.M.புரோஜ்கான்
அதிரை
தகவல்;N.K.M.புரோஜ்கான்
அதிரை
Thursday, January 16, 2014
மரண அறிவிப்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwAgf1QFzPddFSP0tAbx2oXasC-h_BZIdRrVM9vcyAPc_nxmMezwP-YIqK79eh_aCKuf2N59Mzb9A7QJEsU8KuvECzrwTwgahfQ1aMWe-ONRW10yr6nhEUXLc7drf7V4rxHCfnHWtcxfdI/s320/Santhook.jpg)
புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு. மு.செ. நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் இ.மு.செ. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஹியா மரைக்காயார், சமூன், மர்ஹூம் முஹம்மது ஜெக்கரியா, முஹம்மது புகாரி, அபுல் ஹசன், முஹம்மது சாலிஹ் ஆகியோரின் சகோதரியும், அப்துல் மாலிக், அஹமது அலி முஹம்மது இஸ்மாயில் ஆகியோரின் தாயாரும், மு.க.செ அக்பர் அவர்களின் மாமியாருமாகிய நூர்ஜஹான்அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ர் தொழுகைக்கு பிறகு தக்வாபள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் ஹக்கில் துவா செய்வோமாக .
தகவல் மு.க.செ .அக்பர்
நியூ யார்க் அமெரிக்கா
Wednesday, January 15, 2014
உறவுகளை உதாசினப்படுத்தாதீர் !
முன்பொருகாலத்தில் உறவுகளும், சொந்தபந்தங்களும், வயதில் மூத்தவர்களும் மதிக்கத்தக்கவர்களாய் மதித்து நடத்தல், மரியாதை நிமித்தமான பயஉணர்வு, தன் சொந்தபந்தங்களை அரவணைத்த நடவடிக்கை பேச்சுவார்த்தை குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் யாவற்றையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்பது என்று அனைத்துப் பண்பாடுகளும் பேணப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலையோ பரிதாபத்திற்குரிய நிலையாக இருந்து வருகிறது. சொந்தபந்தங்களை தூக்கிஎறிந்தும், வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் வஞ்சிக்கப்படுவதும் வயதில் மூத்தவர்களோ கேலிக்கு ஆளாக்கவும்படுகின்றனர்.காசுபணம் உள்ளவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.தூக்கிவளர்த்த உறவினர்கள் தூரமாக்கப்படுகிறது. குடும்பப்பிரச்சனைகள் மூன்றாம் நபர்கள் அறியும்படி வீதிக்கு வருகிறது.இப்படிப்பட்ட அவலநிலைகள் இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினரிடையே அதிகரித்திருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.
உறவுமுறைகளில் ஏற்படும் இத்தகைய விரிசலுக்குக் காரணம் பலவிதமாகச் சொல்லலாம் அதில் முதலிடம் பெறுவது பணவசதியாகத்தான் இருக்கமுடியும் ஆவதும் பணத்தாலே அழிவதும் பணத்தாலே என்று சொல்வது போல பணவசதிகளைப் பொறுத்து உறவுமுறைகள் மதிக்கப்படுகின்றது.வசதி நிறைந்த உறவினர்களிடம் போலியான பாசம்காட்டி மிக அருகாமையில் அவர்களுடன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு உறவினர் என்றதோற்றத்தை தனது உயரிய நடிப்பின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டு உள்ளொன்றும் புறமொன்றுமாய் இருமாப்புடன் உள்ள இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அடுத்து சொலவதானால் காலம் செல்லச் செல்ல விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியில் மனிதர்கள் தன் கவனத்தை முழுமையாக வேறுபக்கம் திருப்பி மாற்றலாக யோசிக்க ஆரம்பித்து விட்டனர். அதன்விளைவு குடும்ப உறவினரின் அன்பு பாசமென்பது நம்மையும் அறியாது நாளுக்கு நாள் விலகிச்சென்று கொண்டிருக்கின்றது. இடைப்பட்ட புதுப்புது சொந்தங்கள் மிக அன்னியோனியமாகவும் நெருங்கிய இரத்த சொந்தங்கள் யாரோ எவரோ போல வெகு தூரமாக விலகிப் போயிருப்பதும் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலைமையாக இருக்கிறது. புரிந்து கொள்ளாத்தன்மையில் விலகிப் போகும் இத்தகைய உறவினர்களின் தவறான முடிவினால் ஏதும் அறியா குழந்தைகள் கூட உறவுகளின் பாசத்திற்கு ஏங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நாளடைவில் என்ன உறவு முறையென்று கூட தெரியாமல் போய் விடுகிறது.
உதாரணத்திற்குச் சொல்வதானால் தனது சொந்த சகோதரர், சகோதரியின் பிள்ளைகளுடைய பெயர் கூட சரியாகத் தெரியாமல் இருப்பவர்களும் உண்டு. அதே சமயம் தனது மனைவி வழிச் சொந்தங்களின் பெயர் மற்றும் விபரங்களை மறக்காமல் அறிந்து வைத்து இருப்பார்கள்.காரணம் காலப்போக்கில் அவர்களது அன்பைப்பெற்று அங்கு தனது பெயரை நிலைநாட்டிக் கொள்ள வேண்டி அந்த புதுவழிச் சொந்தங்களிடம் பாசம் காட்டி தன்னாலான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு தேவைகள் பூர்த்தியானதும் வளர்த்தகிடா மார்பில் பாய்வதுபோல் அவர்களின் உண்மைக் குணத்தைக் காண்பித்து உறவினர்களை உதாசினப்படுத்தி உறவை முறித்துக் கொள்கிறார்கள்.. பாதிக்கப்படுபவர் தன்னிலையை நினைத்து வேதனைப் படுவதுதான் மிச்சமாக இருக்கும். இதுவே தற்ப்போது நடை முறையில் நடந்து கொண்டு இருக்கும் உண்மை நிலையாகும்.
தனது சொந்தபந்தம் வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருக்க வேண்டும்.பெரியோர்களை மதித்து நடத்தல் உறவுகளை மதித்து பேசுதல் உள்ளன்புடன் பாசம் வைத்தல் ஆகியவை மனதினில் ஆழப்பத்திந்து இருக்க வேண்டும்.இப்படி இருப்பதன் மூலம் உறவுகளில் பிளவு வர வாய்ப்பில்லாமல் இருக்கும்.
எது எப்படியிருந்தாலும் கடைசியில் நமக்குக் கைகூடி நிற்ப்பதும் எங்கோ ஒரு மூலையில் இருந்து நம் நிலைமையை நினைத்துக் கவலைப்படுவதும் நமது இரத்த உறவாகத்தான் இருக்கும். ஆகவே இதைஅனைவரும் உணர்ந்து நமது வாரிசுச் சொந்தங்கள் பாசத்திற்கு ஏங்காமல் ஏழ்மைநிலையில் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு அளித்து தனது உறவுகளை கைவிட்டு விடாமல் கூடி வாழ்வோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில்லா வாழ்க்கையில் நம் சன்னதிகள் தொடர உறவுகளைப் பிரியாமல் ஒற்றுமையுடன் தொடர்ந்து மகிழ்ந்திருப்போம்...
ஆகவே கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறலாம் என்ற முதுமொழிக்கு ஏற்ப உறவுகளை உதாசினப்படுத்தாமல் உள்ளன்புடன் நேசிப்போமாக.!!!
அதிரை மெய்சா
உறவுமுறைகளில் ஏற்படும் இத்தகைய விரிசலுக்குக் காரணம் பலவிதமாகச் சொல்லலாம் அதில் முதலிடம் பெறுவது பணவசதியாகத்தான் இருக்கமுடியும் ஆவதும் பணத்தாலே அழிவதும் பணத்தாலே என்று சொல்வது போல பணவசதிகளைப் பொறுத்து உறவுமுறைகள் மதிக்கப்படுகின்றது.வசதி நிறைந்த உறவினர்களிடம் போலியான பாசம்காட்டி மிக அருகாமையில் அவர்களுடன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு உறவினர் என்றதோற்றத்தை தனது உயரிய நடிப்பின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டு உள்ளொன்றும் புறமொன்றுமாய் இருமாப்புடன் உள்ள இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அடுத்து சொலவதானால் காலம் செல்லச் செல்ல விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியில் மனிதர்கள் தன் கவனத்தை முழுமையாக வேறுபக்கம் திருப்பி மாற்றலாக யோசிக்க ஆரம்பித்து விட்டனர். அதன்விளைவு குடும்ப உறவினரின் அன்பு பாசமென்பது நம்மையும் அறியாது நாளுக்கு நாள் விலகிச்சென்று கொண்டிருக்கின்றது. இடைப்பட்ட புதுப்புது சொந்தங்கள் மிக அன்னியோனியமாகவும் நெருங்கிய இரத்த சொந்தங்கள் யாரோ எவரோ போல வெகு தூரமாக விலகிப் போயிருப்பதும் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலைமையாக இருக்கிறது. புரிந்து கொள்ளாத்தன்மையில் விலகிப் போகும் இத்தகைய உறவினர்களின் தவறான முடிவினால் ஏதும் அறியா குழந்தைகள் கூட உறவுகளின் பாசத்திற்கு ஏங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நாளடைவில் என்ன உறவு முறையென்று கூட தெரியாமல் போய் விடுகிறது.
உதாரணத்திற்குச் சொல்வதானால் தனது சொந்த சகோதரர், சகோதரியின் பிள்ளைகளுடைய பெயர் கூட சரியாகத் தெரியாமல் இருப்பவர்களும் உண்டு. அதே சமயம் தனது மனைவி வழிச் சொந்தங்களின் பெயர் மற்றும் விபரங்களை மறக்காமல் அறிந்து வைத்து இருப்பார்கள்.காரணம் காலப்போக்கில் அவர்களது அன்பைப்பெற்று அங்கு தனது பெயரை நிலைநாட்டிக் கொள்ள வேண்டி அந்த புதுவழிச் சொந்தங்களிடம் பாசம் காட்டி தன்னாலான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு தேவைகள் பூர்த்தியானதும் வளர்த்தகிடா மார்பில் பாய்வதுபோல் அவர்களின் உண்மைக் குணத்தைக் காண்பித்து உறவினர்களை உதாசினப்படுத்தி உறவை முறித்துக் கொள்கிறார்கள்.. பாதிக்கப்படுபவர் தன்னிலையை நினைத்து வேதனைப் படுவதுதான் மிச்சமாக இருக்கும். இதுவே தற்ப்போது நடை முறையில் நடந்து கொண்டு இருக்கும் உண்மை நிலையாகும்.
தனது சொந்தபந்தம் வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருக்க வேண்டும்.பெரியோர்களை மதித்து நடத்தல் உறவுகளை மதித்து பேசுதல் உள்ளன்புடன் பாசம் வைத்தல் ஆகியவை மனதினில் ஆழப்பத்திந்து இருக்க வேண்டும்.இப்படி இருப்பதன் மூலம் உறவுகளில் பிளவு வர வாய்ப்பில்லாமல் இருக்கும்.
எது எப்படியிருந்தாலும் கடைசியில் நமக்குக் கைகூடி நிற்ப்பதும் எங்கோ ஒரு மூலையில் இருந்து நம் நிலைமையை நினைத்துக் கவலைப்படுவதும் நமது இரத்த உறவாகத்தான் இருக்கும். ஆகவே இதைஅனைவரும் உணர்ந்து நமது வாரிசுச் சொந்தங்கள் பாசத்திற்கு ஏங்காமல் ஏழ்மைநிலையில் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு அளித்து தனது உறவுகளை கைவிட்டு விடாமல் கூடி வாழ்வோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில்லா வாழ்க்கையில் நம் சன்னதிகள் தொடர உறவுகளைப் பிரியாமல் ஒற்றுமையுடன் தொடர்ந்து மகிழ்ந்திருப்போம்...
ஆகவே கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறலாம் என்ற முதுமொழிக்கு ஏற்ப உறவுகளை உதாசினப்படுத்தாமல் உள்ளன்புடன் நேசிப்போமாக.!!!
அதிரை மெய்சா
Tuesday, January 14, 2014
மரண அறிவிப்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwAgf1QFzPddFSP0tAbx2oXasC-h_BZIdRrVM9vcyAPc_nxmMezwP-YIqK79eh_aCKuf2N59Mzb9A7QJEsU8KuvECzrwTwgahfQ1aMWe-ONRW10yr6nhEUXLc7drf7V4rxHCfnHWtcxfdI/s320/Santhook.jpg)
கீழத்தெருவை சேர்ந்த மெத்தை வீட்டு M.K.இபுராகிம்ஷா அவர்களின் மகன் ஜாகிர் ஹுசைன்
அவர்கள் இன்று துபாயில் காலமாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா துபாயில் நல்லடக்கம்
செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஹக்கில் துவா
செய்வோமாக .
Saturday, January 11, 2014
பட்டுக்கோட்டையில் சாலை விபத்து
நேற்று காலை பட்டுக்கோட்டையில் இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது .பட்டுகோட்டையில் இருந்து அதிரை நோக்கி வந்து
கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி லாரியின் சக்கரத்தின் அடியில் சிக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டனர் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நமது ஏரியாவில் தொடர்ந்து நடந்தாலும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புனர்வில்லை இனிமேலாவது கவனமாக செல்லுங்கள் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக
Thursday, January 9, 2014
மரண அறிவிப்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwAgf1QFzPddFSP0tAbx2oXasC-h_BZIdRrVM9vcyAPc_nxmMezwP-YIqK79eh_aCKuf2N59Mzb9A7QJEsU8KuvECzrwTwgahfQ1aMWe-ONRW10yr6nhEUXLc7drf7V4rxHCfnHWtcxfdI/s320/Santhook.jpg)
தரகர்தெருவை சேர்ந்த மர்ஹூம் சித்திக் முஹம்மது அவர்களின் மகளும், ஹாஜி K. M. முஹம்மது அவர்களின் மனைவியும், S.S.M. முஹம்மது ரஷாத், கு.மு என்கிற மர்ஹூம் S.S.M. குல் முஹம்மது ஆகியோரின் சகோதரியும், M. அஹமது சிராஜுதீன், M. அஹமது அஸ்லம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா உம்மல் ஹபீபா அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
M.அஹமது சிராஜுதீன்
NEW YORK U.S.A
மரண அறிவிப்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwAgf1QFzPddFSP0tAbx2oXasC-h_BZIdRrVM9vcyAPc_nxmMezwP-YIqK79eh_aCKuf2N59Mzb9A7QJEsU8KuvECzrwTwgahfQ1aMWe-ONRW10yr6nhEUXLc7drf7V4rxHCfnHWtcxfdI/s320/Santhook.jpg)
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், M. சேக்தாவூது அவர்களின் சகோதரரும், தாவுது இப்ராஹீம் அவர்களின் மச்சானும், ஜமால் முகம்மது, தாஜுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது சரிப், சேக்தாவுது, அஸ்ரப் அலி ஆகியோரின் மாமானாருமாகிய மின்னா என்கிற முகம்மது இப்ராகீம்அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Wednesday, January 8, 2014
வீடு காலி இல்லை... முஸ்லிம்களுக்கு!
எச். பீர்முஹம்மது
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகப் பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஆகியவற்றின் வரவு காரணமாக, படித்த நடுத்தரவர்க்கத்தின் இடப்பெயர்வு அதிகரித்திருக்கிறது. சிறு நகரங்கள் எல்லாம் பெருநகரங்கள் என்ற எல்லையைத் தொடுவதற்குக் காத்திருக்கின்றன. கிராமப்புற மனிதர்கள் பிழைப்பு தேடி மாவட்டத் தலைநகரங்களில் அல்லது சென்னைக்கு நகர்வது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதன் மூலம், தமிழ்நாட்டில் சமூக நகர்வு உருவாகியிருக்கிறது. இந்த நிகழ்வு எல்லாச் சமூகங்களுக்கும் சாதகமாக இருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் நிதர்சனம். ஒன்றைப் புறந்தள்ளிவிட்டு மற்றொன்று நகர்வது பன்மைத்தன்மை கொண்ட தமிழ்ச் சூழலுக்கு ஆரோக்கியமானதல்ல.
இடம்பெயரும் முஸ்லிம்கள்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கி, அதே நேரத்தில் நடைபாதைக் கடைகள், பலசரக்கு வியாபாரம் போன்றவற்றைத் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நம்பியிருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகம், புலம்பெயர்வதன் மூலம் தனக்கான இரையைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட தமிழ் இஸ்லாமிய இளைஞர்கள் எல்லாம் அரபு நாடுகளில் வாழ்வாதாரத்துக்காகப் படையெடுக்கும் சூழலே பெரும்பாலும் தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் தொழில்மயமாதல், பொறியியல் கல்விமயமாதல் போன்ற நிகழ்வுகளின் காரணமாக நடுத்தர, மேல்தட்டு இஸ்லாமியக் குடும்ப இளைஞர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகளாக உருவாகியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அரபு நாடுகளுக்குச் சென்றுவிட்டாலும், குறிப்பிட்ட சதவீதத்தினர் பிழைப்பு தேடிப் பெருநகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். தகுதிகள் இருந்தும் இஸ்லாமியர் என்ற அடையாளத்துக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் பல, இவர்களை நிராகரிக்கும் போக்கு இருக்கிறது. கூடவே, அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும் பெருநகரங்களில் மிகப் பெரிய சிக்கலாக உருவாகியிருக்கிறது.
சென்னைக்கு முதலிடம்
வாடகைக்கு வீடுகள் கொடுப்பதில் இஸ்லாமியர்களை நிராகரிப்பதில் தமிழகத்திலேயே சென்னைக்குத்தான் முதலிடம் என்று சொல்ல வேண்டும். தோற்றத்தின் மூலம் இல்லையென்றாலும், பெயரைவைத்து இஸ்லாமியர் என்று எளிதில் அடையாளம் காணப்படும் ஒருவர், (பெயர்கள் அரபுமொழியில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது) தமிழ்நாட்டு நகரம் ஒன்றில் “வாடகைக்கு வீடு தருவீர்களா?” என்று கேட்ட உடனேயே வீட்டு உரிமையாளர்களிடமிருந்து கிடைக்கும் பதில் இதுதான்: “வேறொருவர் முன் பணம் கொடுத்துவிட்டார்.”
நாங்கள் முஸ்லிம்; பிரச்சினை இல்லையே?
பதிப்பாளராகவும் பத்திரிகையாளராகவும் இருக்கும் நண்பர் ஒருவர், என்னிடத்தில் சொன்ன தகவல் இது. சென்னையின் முக்கியப் பகுதி ஒன்றில் புதிதாகத் தான் கட்டிய வீட்டை வாடகைக்கு விடுவதற்காக அறிவிப்பு கொடுத்திருக்கிறார். இஸ்லாமியக் குடும்பம் ஒன்று வீடு கேட்டு வந்தது. அவர் எதிர்பார்த்த வாடகையை அவர்கள் கொடுக்கத் தயாராக இருந்ததால் அவர்களுக்கு வீட்டைக் கொடுத்திருக்கிறார். அந்தத் தருணத்தில் அவர்கள் கேட்ட கேள்வி, பத்திரிகையாளரான அவரின் நேர்மையான மனதை சங்கடப்படுத்தியிருக்கிறது: “சார், நாங்க முஸ்லிம். உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே?”
பலமுறை இதைக் கேட்டிருக்கிறார்கள். “யாராக இருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. வாடகை ஒழுங்காக வந்தால் போதும்” என்று சொல்லியிருக்கிறார் நண்பர். சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சகோதரத்துவ உணர்வோடு நகர்ந்துவந்த தமிழ்ச் சமூகம், தங்களின் இன சகாக்களை மத அடையாளத்துக்காக அல்லது பயங்கரவாத பிம்பத்துக்காக நிராகரிப்பது கவலைக்குரியது.
அன்று ஈழத் தமிழர்கள்; இன்று முஸ்லிம்கள்
ராஜீவ் காந்தி படுகொலை தருணத்தில், இங்குள்ள ஈழத் தமிழர்கள் சக தமிழர்களால் விடுதலைப் புலிகளாகப் பார்க்கப்பட்டதும், அவர்களால் ஒதுக்கப்பட்டதும் இதனோடு சேர்த்து கவனிக்கத் தக்கது. இதேபோல், இஸ்லாமியரை நிராகரிக்கும் போக்கு, சென்னையில் தொடங்கி தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிவருவது மிகவும் வருந்தத் தக்கது.
இது என்ன தமிழ்நாட்டில் மட்டுமா நடக்கிறது? நாடு முழுவதும் இதே போக்குதானே நிலவுகிறது; இன்னும் சொல்லப்போனால், இந்த நிராகரிப்பு சர்வதேச அளவிலானது அல்லவா என்று கேட்கலாம். தமிழ்நாட்டைக் கொஞ்சம் நாம் வேறுபடுத்தித்தான் பார்க்க வேண்டும். காரணம், பெரியாரின் தாக்கமும் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியும்.
விதிவிலக்கான சில தருணங்களைத் தவிர, மதவாத அலையிலிருந்து எப்போதுமே தமிழ்நாடு ஒதுங்கியே இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்த மாதிரியான மனோபாவம் தொடர்வது மிகவும் ஆபத்தானது.
பயங்கரவாதம் காரணமா?
பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை அது இந்தியாவின் பெரும்பான்மையான முஸ்லிம்களால் அங்கீகரிக்கப் படவில்லை. மதப் பிரதிகளை எதிர்மறையாக அணுகும் சில குழுக்களே பயங்கரவாதச் செயல்பாடுகளை முன்னெடுக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, நிராகரிக்கப்படும், அச்சுறுத்தப்படும் எந்தச் சமூகமும் நிராகரிப்பின் வலியால் அந்தக் குழுக்களின் வாதத்தோடு ஒருங்கிணைய வாய்ப்பிருக்கிறது. இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
நிராகரிப்பின் அரசியல்
இஸ்லாமியர்களுக்கு வீடுகள் நிராகரிக்கப்படுவதற்கான அரசியல் என்ன? இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவ்வப்போது நிகழும் குண்டுவெடிப்புகள், பயங்கரவாதச் செயல்பாடுகளின் தாக்கமா இது? முழுமையாக அப்படிச் சொல்லிவிட முடியாது. பயங்கரவாதச் செயல்பாடுகளைவிடவும் அது தொடர்பாக உருவாக்கப்படும் பிம்பங்களும் பீதிகளுமே அடிப்படை.
ஒரு குற்றச் சம்பவத்தில் ஒரு முஸ்லிம் கைதுசெய்யப்படும்போது, அவர்களுக்குத் தங்கியிருக்க வீடு கொடுத்த உரிமையாளர் காவல் துறையின் நெருக்கடிக்கு ஆளாகிறார். அலைக்கழிக்கப்படுகிறார். இப்படியான விஷயங்கள் ஊடகங்களில் வரும்போது, எல்லோரிடமும் அந்த பீதி உருவெடுக்கிறது. ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தின் மீதும் அடையாளக் கறையாக அது படிகிறது. இதன் காரணமாக, எல்லோரையும் சந்தேகத்துடன் பார்க்கும் மனோபாவம் இயல்பாக உருவாகிறது. ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட சமூகம் சிறுபான்மையாக இருக்கும்போது, அந்தச் சமூக மனிதர்களின் குற்றச் செயல்பாடுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் செயல்பாடாகப் பார்க்கப்படுவது உலக வரலாற்றில் பல தருணங்களில் நடந்திருக்கிறது. இதுவும் ஒருவகையான பேரினவாதக் கருத்தாக்கம்தான்.
அறிமுகம் இல்லாத நபர்களின் அடையாளங்களையும் பின்னணியையும் உறுதிசெய்யும் வழிமுறைகள் தற்காலத்தில் ஏராளமாக இருக்கின்றன. மேலும், காவல் துறையின் நெருக்கடியையும் ஒருவர் சமாளித்துக்கொண்டு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகள் வெளிப்படையாக இருக்கின்றன. எனவே, வீடு கேட்டு வருபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மேற்கண்ட வழிமுறைகளை வீட்டு உரிமையாளர்கள் பின்பற்றினால் எதற்கும் பயப்படத் தேவையில்லை. அப்படியில்லாமல், இஸ்லாமியர் என்று தெரிந்த மாத்திரத்திலேயே, “வேறொருவர் முன்பணம் கொடுத்துவிட்டார்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்வதால் உண்டாகும் வடு அவ்வளவு சாதாரண மானதல்ல.
ஜனநாயக சக்திகளின் கடமை
இன்றைய தமிழ் இஸ்லாமியச் சமூகம் ஒதுங்குதல் மற்றும் ஒதுக்கப்படுதல் ஆகிய இரண்டுக்குமான இடைவெளியில் போராடிக்கொண்டிருக்கிறது. பொது நீரோட்டத்தில் கலப்பதுகுறித்த விமர்சனம் பலரால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது. ஆனால், ஒதுக்கப்படுதல்குறித்த விமர்சனம் தமிழ்நாட்டின் ஜனநாயக, முற்போக்கு சக்திகளால் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் பன்மைத்தன்மை பொருந்திய, நல்லிணக்க உறவுகள் உருவாக வேண்டும். மத நல்லிணக்கத்துக்கான முன்னோடியாகத் தமிழகம் திகழ வேண்டும்!
courtesy;The hindu(Tamil editon
கவிக்கோ அப்துல்ரகுமான் மருத்துவமனையில் அனுமதி!
கவிக்கோ அப்துல்ரகுமான், தமிழின் பிரபலமான கவிஞர். இவர், பால்வீதி, சுட்டுவிரல், உன் கண்ணால் தூங்கிக்கொள்கிறேன் என பல கவிதை நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். தமிழில் ஹைகூவையும் கஜலையும் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கே உண்டு. கவியரங்க மேடைகளிலும் தனி ஆளுமை செலுத்திவந்தவர் அப்துல்ரகுமான். வாணியம்பாடி கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற கவிக்கோ அப்துல்ரகுமான், ’இனிய உதயம்’ இலக்கியத் திங்களிதழின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.
மூன்று வாரங்களுக்கு முன் டைபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அப்துல்ரகுமான், மீண்டும் உடல் நலக்குறைவால் சென்னை நந்தனத்தில் இருக்கும் தனியார் மருத்து வமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை இலக்கியவாதிகளும், அரசியல் பிரமுகர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். ‘அவருக்கு சுவாசப்பிரச்சினை இருக்கிறது. விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவார்’ என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Courtesy: Nakkeeranமூன்று வாரங்களுக்கு முன் டைபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அப்துல்ரகுமான், மீண்டும் உடல் நலக்குறைவால் சென்னை நந்தனத்தில் இருக்கும் தனியார் மருத்து வமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை இலக்கியவாதிகளும், அரசியல் பிரமுகர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். ‘அவருக்கு சுவாசப்பிரச்சினை இருக்கிறது. விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவார்’ என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல் 'ஷவ்கத் அலி
BOSTON ;U.S.A
மீண்டும் தண்ணீர் திறப்பு !
பேருராட்சி தலைவர், அஸ்லம் அதிமுக கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள்,அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் என பலர் முயற்சியில் ஆற்று நீர் தற்போது அதிரைக்கு வந்து கொண்டு இருக்கிறது.அதிமுக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளர் அப்துல் அஜீஸ் அவர்களின் உத்தரவில் மணல் மூட்டைகள் அகற்றப்பட்டு செக்கடி குளம் மற்றும் மரைக்கா குளத்திற்கு தண்ணீர் விடப்பட்டு உள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhalc2WnBK2a0FdWuIPZnK4lThaUAcq87PVRfe3IyWShikMqqzyJvM3Y-_gEXgOcWy8wyES4x0A6hGpYIlqi3ZDVgeGiw004kLIR2bYOWzSuuComxGaFVkg9ah4M_JDeWCSNrzCMP0wfa69/s1600/adirai12.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhalc2WnBK2a0FdWuIPZnK4lThaUAcq87PVRfe3IyWShikMqqzyJvM3Y-_gEXgOcWy8wyES4x0A6hGpYIlqi3ZDVgeGiw004kLIR2bYOWzSuuComxGaFVkg9ah4M_JDeWCSNrzCMP0wfa69/s1600/adirai12.jpg)
Tuesday, January 7, 2014
அதிரையில் மழை
இன்று அதிரையில் மிதமான மழை பெய்து வருகிற. இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் உஷ்ணம் தணிந்து குளர்ச்சியாக காணப்படுகிறது
![young pretty girl umbrella rain shrinking](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy1_8qRcOkc5-B_kQlajcrlntHe38npOp1X3E6DSmYCymeGorJPvUJF_TUuhp3vDmDfP175IfCnyYUqAvN-8bxs7vGYqPph7uyBBZgoHlXehMeP5QcueCVwUEgDXKBgxoDlxtjbmB5RIU/s400/young+pretty+girl+umbrella+rain+shrinking.jpg)
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. என்று ஊர்தகவல்கள் சொல்லுகின்றன.
![young pretty girl umbrella rain shrinking](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy1_8qRcOkc5-B_kQlajcrlntHe38npOp1X3E6DSmYCymeGorJPvUJF_TUuhp3vDmDfP175IfCnyYUqAvN-8bxs7vGYqPph7uyBBZgoHlXehMeP5QcueCVwUEgDXKBgxoDlxtjbmB5RIU/s400/young+pretty+girl+umbrella+rain+shrinking.jpg)
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. என்று ஊர்தகவல்கள் சொல்லுகின்றன.
Friday, January 3, 2014
அல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு
ஸூரத்துல் பகரா தொடர்ச்சி
21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். நீங்கள் பயபக்தியுடையவர்கள் ஆகலாம்.
22. அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச் செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனிவர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; நீங்கள் அறிந்துகொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இனைகளை ஏற்ப்படுத்தாதீர்கள்.
23. இன்னும், நம் அடியாருக்கு நாம் அருளியுள்ளதில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களேயானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
24. நீங்கள் செய்யாவிட்டால் – அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது – மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். நிராகரிப்பவர்களுக்காகவே அது சித்தப்படுத்தப் பட்டுள்ளது.
25. நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப் படும்போதெல்லாம் “ இதுவே முன்னரும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் இது போன்றதுதான் கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும், அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் மேற்ப்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள்; ஆனால் நிராகரிப்பவர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று கூறுகிறார்கள். அவன் இதைக் கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப்படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
27. இவர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச் செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டுவரப் படுவீர்கள்.
29. அவன் எத்தகையவன் என்றால்: அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.
30. இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “ நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன் ” என்று கூறியபோது, அவர்கள் “ நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப் போகிறாய்? இன்னும், நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் ” என்று கூறினார்கள்; அவன் “ நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன் ” எனக் கூறினான்.
courtesy.
QURAN RETOLD IN TAMIL
Subscribe to:
Posts (Atom)