Wednesday, November 4, 2015

நெல்லிக்கனி அறுசுவைக் கனி


nellikkaiஎதை சாப்பிட்டாலும் அதன் சுவையை இது இனிப்பு, இது கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்று நமது நாக்கு உணர்ந்துவிடும். ஆனால் இந்த ஆறு சுவைகளும் ஒரே பொருளில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?.
ஆமாம் நெல்லிக்காயில் மட்டுமே அறுசுவைகளும் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நெல்லிக்கனியை எடுத்து கடித்தால் கசப்பதையும், துவர்ப்பதையும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அதில் சிறிது உப்புத்தன்மையும், புளிப்புத்தன்மையும், கார்ப்பு சுவையும் மறைந்துள்ளது.
நெல்லியை சுவைத்துவிட்டு தண்ணீர் குடித்தால் இனிப்பு சுவையை உணரலாம். இப்படி அறுசுவையும் கலந்த இயற்கையின் அதிசயக் கனியாக விளங்குகிறது நெல்லிக்கனி. ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டது இது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval