பல முக்கியத் துறைகளில் இந்தியா மேம்பட்டு உயர்தரம் அடைந்துள்ளது என மார்தட்டிக் கொண்டிருக்கும் அதே தருணத்தின், இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கும் பல கிராமப் புறங்களில் இன்னும் பழக்கம் என்ற பெயரில் பின்பற்றி வரப்படும் சாங்கியங்கள் காரணமாக பல கொடுமைகள் நடந்தேறி வருகின்றன.
அப்படி பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கொடுமையின் காரணமாக தான் ஒரு பதின் வயது சிறுவனின் உயிர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பலியானது.
இறந்து போன சொந்த அண்ணின், விதவை மனைவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் 15 வயதே நிரம்பிய சகோதரன் தற்கொலை செய்துக் கொண்டான்.