
நேர்மையான நல்ல தலைவன் குடும்பத்திற்கு காலமில்லையா.???
தமிழகத்தின் முதல் அமைச்சராக காமராஜ் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம்.
காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே மதுரைக்குச் சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜ்.
வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் கண் விழித்துப் பார்த்தார்.