நெல்லிக்காயின் நன்மைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து உட்கொண்டு வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காய் ஏற்கனவே புளிப்பு என்பதால், அதனை தித்திக்கும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும். நெல்லிக்காயை தேனில் ஊற வைப்பதால் சுவை மட்டுமின்றி, அதன் சக்தியும் இரண்டிப்பாகும்.