இன்றைய காலத்தில் சைவ உணவை விட, அசைவ உணவுகளைத் தான் ஏராளமானோர் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக சிக்கனைத் தான் அனேக மக்கள் சாப்பிடுகிறார்கள். அதற்கேற்றாற் போல் எந்த ஒரு ஹோட்டல்களிலும் சிக்கன் வெரைட்டிகளே அதிகம் இருக்கிறது. அக்காலத்தில் வீட்டிலேயே வளர்க்கும் நாட்டுக் கோழியைத் தான் மக்கள் சமைத்து சாப்பிட்டு வந்தனர். ஆனால் இக்காலத்திலோ இறைச்சி அதிகம் வேண்டுமென்றும், கோழி சீக்கிரம் வளர வேண்டுமென்றும் கண்ட கெமிக்கல்கள் கோழி ஊசியின் வழியே கொடுக்கப்படுகிறது.