Saturday, April 6, 2019

காடுகளை பாதுகாப்போம்..

Inline image
1947 களில் குற்றாலம் மலையை ஆய்வு செய்த வெள்ளைக்கார டாக்டரான ஒயிட் என்பவர். 1008 வகையான மூலிகைகளைக் கொண்ட குற்றாலம் சமய சஞ்சீவி என்கிறார். டாக்டர் ஒயிட். அதோடு பல் வேறு வகையான பழங்களும் விளையக் கூடிய அற்புதமான மலை என்கிறார் அந்த ஆங்கிலேயர்
மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன.
2000 வகையான மலர்கள்
பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பல வகையான பழங்கள்
ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.
துளிர்க்கும் மூலிகைச் செடிகள்
தென்மேற்கு பருவக்காற்று துவங்கும் மே மாதம் முதல் ஆகஸ்ட்டின் மத்திய நாட்கள் வரையிலும் சுமார் மூன்றரை மாதங்கள் வரை நீடிக்கும் சாரல் மழை சீசனில் மலையில் உள்ள மூலிகைச் செடிகள் உயிர்பெற்று துளிர்த்துவிடும்.

காடுகளை பாதுகாப்போம்..
நாளைய தலைமுறைக்கு இயற்கையை பாதுகாப்போம்
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval