யார், யாரோடு கூட்டணி வைக்கிறார்கள், யார் இருக்கிற கூட்டணியை முறித்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்விகளும், ஒரு சில இடங்களில் அதற்கான எதிர்பார்ப்பும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கிற வேளையில், ‘திறந்த அழைப்பு’ம் சில கட்சிகளில் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு அழைப்பில் அறிவாலயம் ஏரியாவில் இன்று காலை (17.3.2016) நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது.