
ஒரு பெண் பள்ளி அருகே 2 வாரமாக பாடத்தை கவனித்துக் கொண்டே இருந்தாள். எங்கள் தலைமை ஆசிரியையும் நானும் அந்த பெண்ணை கூப்பிட்டு விசாரிக்க. அவள் நரி குறவர் இன பெண் எனவும், நான் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். வயதிற்கு வந்த காரணத்தால் என்னை திருமணம் செய்ய அத்தை மகன் தொல்லை தருவதால் என் பெரியம்மா இருக்கும் இந்த ஊருக்கு வந்து விட்டேன். எனக்கு படிக்க ஆசை ஆனால் முடியுமானு தெரியல. அதான் நீங்க நடத்துவது பார்த்து பாடம் கவனிக்கிறேன் என்றாள். பகலில் தனியாக இருப்பதால் பாதுகாப்பு கருதி பள்ளியிலே பாடம் கவனிக்க அனுமதித்தோம். அவங்க பெரியம்மாவிடம் கூப்பிட்டு உயர்நிலை பள்ளியில் சேர்க்க நினைத்தோம். அந்த மாணவியும் தன் சொந்த ஊர் சென்று துணி, பை எல்லாம் எடுத்து வந்து ஆர்வத்துடன் வந்து நின்றாள்.