பனைப் பணிகளில் உலகின் ஒளியாவோம்!
ம.செந்தமிழன்
நண்பர்களே,
செம்மை பனைப் பணி செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘வீட்டுக்கு வீடு கருப்பட்டி காய்ச்சுவோம்’ எனும் செயல்பாட்டினை முன்வைக்கிறோம். சென்னை, பெங்களூரு மரபுக் கூடல்களில் கருப்பட்டி காய்ச்சுதல் பொதுமக்களுக்கு நேரடியாகக் கற்றுத்தரப்பட்டது. இப்பயிற்சிகளைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென விரும்புகிறேன்.
