அவர் நாடாளுமன்றத்திற்கு ஆட்டோ ரிக்ஷாவில் சென்றார்.நிகழ்ச்சிகளுக்கு உரை நிகழ்த்த ரெயிலில் பயணித்தார்.
21 ஆண்டுகள் எம்.பியாக பதவி வகித்தும் அவர் எதனையும் சம்பாதிக்காத ஏழ்மை நிலையிலேயே மரணித்தார்.அப்துல் நாஸர் மஃதனி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது கேரளாவில் என்.டி.எஃப் போன்ற அமைப்புகள் தவிர வேறு யாரும் கவனிக்காது இருந்த வேளையில் கோவை சிறைக்குச் சென்ற சேட் சாஹிப், அப்துல் நாஸர் மஃதனியின் நிலைமையைக் கண்டுவிட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உடைந்து அழுதார்.