1991 ஆம் ஆண்டு தென் டெல்லி தொகுதியில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் பத்திரிக்கையாளர் குஷ்வந் சிங் அவர்களிடம் கடன் வாங்கி அந்த தேர்தலை சந்தித்தார். என்றைக்கு நம் மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுத்தார்கள், அந்த தேர்தலில் தோற்று போனார். அதற்கு பின் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டார். அங்கு காலம் சென்ற முன்னால் முதல்வர் திரு.ஹித்தேஷ்வர் வீட்டை தேர்தல் ஆனையத்தின் விதிமுறை படி வாடகைக்கு எடுத்து அந்த வீட்டிற்கு இன்று வரையும் தவறாமல் வாடகை கொடுத்து வருகிறார். பொருளாதார நிபுணர், எளிமையானவர், அதிகம் பேசாதவர், ஆடம்பர ஆர்ப்பாட்ட அரசியலை விரும்பாதவர்.
