தலைநகர் டெல்லியில் கோடைக் காலத்தில் வெப்பம் வறுத்தெடுக் கும். குளிர்காலத்திலோ முதுகு தண்டுவடத்தை உறையவைக்கும் பனி பொழியும். இயற்கையின் தன்மையை ஏற்று அதற்கேற்ப வாழத் தொடங்கியுள்ளனர் அங்குள்ள மக்கள். ஆனால் இப்போது வாழ்வதற்கே தகுதியில்லாத நகரங்கள் பட்டியலில் டெல்லியும் சேர்ந்துள்ளதுதான் கொடுமையிலும் கொடுமை.