கொஞ்சம் நல்லதையும் எல்லாருக்கும் பகிர்வோம் !!! பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்!
"அமெரிக்காவுல கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கற, எதிர்காலத்துல பெரிய அச்சுறுத்தலா இருக்கக்கூடிய ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்தேன். அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கே வந்துட்டேன்" என பொறுப்பு உணர்வுடன் பேசுகிறார் திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிபி செல்வன்.
இந்த நூற்றாண்டில், இயற்கைக்கு கேடு விளைவிப்பதில் பெரும் பங்கை பிளாஸ்டிக் தத்தெடுத்துள்ளது. காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பாதிப்பு பரவி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்காக களத்தில் குதித்துள்ளார் 26 வயதான சிபி செல்வன்.