நாகை மாவட்ட பாஜக தலைவர் நேதாஜி அவர்களின் அழைப்பினை ஏற்று, அவரது இல்லத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்தார்.
அவரை, நேதாஜி அவர்களும், அவருடைய தாயாரும், அவரது மனைவியாரும் அன்போடு வரவேற்று உபசரித்தனர். அவர்களுக்கு காந்தியின் "சத்திய சோதனை" என்ற நூலையும், டாக்டர் KVS ஹபீப் முகம்மது எழுதிய "எங்கே அமைதி" என்ற நூலையும் MLA அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.
