வறுமையின் காரணமாக பள்ளிக்கு வருவதை தவிர்க்கக் கூடாது என்பதற்காக, இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த பெருந்தலைவர் காமராஜரால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தது.
தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளுக்கு மட்டுமே இலவசக் கல்வி என்ற நிலையை மாற்றி, 100 ரூபாய் வரை சம்பளம் பெறும் பிற சமூகத்தை சேர்ந்த குழந்தைகளும் இலவசமாய் தொடக்கக் கல்வி கற்கும் சட்டத்தை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜ்.
