பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடுகளுடன் ரூ.30,000 கோடிக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சடித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து பல்ேவறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கள்ள நோட்டு புழக்கம் குறைந்தபாடில்லை. இந்திய பொருளாதாரத்துக்கு வேட்டுவைக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து புழக்கத்தில் விடப்படுகின்றன.