Saturday, February 2, 2019

மரண அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஜெ அப்துல் ரஜாக் (83) வஃபாத்!

அதிரை நியூஸ்: பிப்.03
அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.கி.ம அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவகர்களின் மருமகனும், மர்ஹூம் ஜெ.எம் இக்பால் ஹாஜியார், மர்ஹும் ஹாஜி ஏ.ஜெ. அஹமது கபீர், ஹாஜி ஏ.ஜெ மஹ்மூத், ஹாஜி ஏ.ஜெ. தாஜுதீன், ஹாஜி ஏ.ஜெ. மீரா ஷாஹிப் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி ஏ.ஆர் அமானுல்லா, ஹாஜி ஏ.ஆர் ஜமால் முகமது, வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஹாஜி ஏ.கே அகமது அன்சாரி அவர்களின் மாமனாருமாகிய சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்குரைஞரும், தமிழ்நாடு வக்ப்வாரிய முன்னாள் தலைவரும், சென்னை புதுக்கல்லூரி முன்னாள் தாளாளரும், அதிராம்பட்டினம், செக்கடி பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவருமாகிய ஹாஜி A.J. அப்துல் ரஜாக் (வயது 83) அவர்கள் இன்று சென்னை அங்கப்பநாயக்கன் தெரு இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (03-02-2019) இரவு 9 மணியளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Thank you Adirai News

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval