
கட ந்த இரண்டு வாரமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது தலைநகர் சென்னையில் நடைபெற்ற ரவுடி வேட்டை. தமிழகம் தாண்டி இந்தியாவையே அதிரவைத்த சம்பவம்.இந்திய வரலாற்றில் 120 ரௌடிகளை சுற்றி வளைத்து அதில் 75 ரௌடிகளை கைது செய்தது வரலாற்றில் இது முதல்முறை.காவல்துறையில் இப்படிப்பட்ட சாதனை நிகழ முதற்காரணமாய் இருந்தவர் பள்ளிக்கரணை ஆய்வாளர் திரு. P. K. சிவகுமார் அவர்கள். சம்பவத்தன்று வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கரணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அவரது குழுவினரை கண்டு நிற்காமல் சென்ற இருசக்கரவாகனத்தை சினிமா பாணியில் துரத்திசென்று பிடித்தனர்.பிடிபட்ட நபரை சோதனை செய்தபோது அவனிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன தொடர்ந்து காவல்நிலையம் அழைத்துவந்து மேற்கொள்ளப்பட்ட கிடுக்கிபிடி விசாரணையில்