இந்த புதிய நடைமுறைக்கு முன், அதாவது நவம்பர் 15க்கு முன் விமான டிக்கெட் வாங்கியவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதியாக 400 செ.மீ சுற்றளவுள்ள பயண பொதிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றாலும் அவர்கள் பயண தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் முன் அனுமதி பெற்றாக வேண்டும்.
2 பயண பொதிகளாக பிரித்து கொண்டு வருபவர்களின் 2 பொதிகளும் சேர்த்து 300 செ.மீ என்ற அளவுக்குள் தான் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது (ஒவ்வொன்றும் 150 செ.மீ அல்லது 59 இன்ச்). நிர்ணயிக்கப்பட்ட புதிய அளவுக்கு மேலிருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும் அல்லது சரக்குக் பொதியாக (Freight or Cargo) மட்டுமே அனுமதிக்கப்படும்.
நவம்பர் 15க்கு முன் டிக்கெட் வாங்கியவர்கள் 2 பொதிகளாக பிரித்த கொண்டு வரும்பட்சத்தில் அதன் ஒவ்வொன்றின் சுற்றளவும் 158 செ.மீ (அல்லது 62 இன்ச்) என்ற அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். மூன்று வகை வகுப்பினருக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும்.
கைக்குழந்தையுடன் செல்பவர்கள் கூடுதலாக 10 கிலோ வரை எடுத்துச் செல்லலாம் என்றாலும் அதன் சுற்றளவு 55*38*20 என்ற அளவிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் புதிய விதிமுறைகள் அறிவிக்கின்றன.
உலகத்தரம் வாய்ந்த சர்வீஸ்களை வழங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த புதிய நடைமுறையை திரும்பப்பெற வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.
என்ன ஒன்னு, இதுவரை பயண பொதிகளை எடைபோட தராசுக்கு அலைந்தோம் இனி டேப்புக்கும் அலையனும் அவ்வளவு தான்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval