Tuesday, May 1, 2018

பட்டுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் வெட்டிக் கொலை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவில் நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
-

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் மஞ்சவயல் கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்  நேற்று நடைபெற்றது. இதையோட்டி 2 சமூகத்தினர் கோவிலில் தரிசனம் செய்ய கூடி இருந்தனர்.

கோவிலில் எந்த சமூகத்தினருக்கு முதல் மரியாதை செய்வது என்பதில் பிரச்சினை இருந்து வந்தது. சுடுகாட்டு பிரச்சினையும் நீண்ட காலமாக நீடித்து வந்தது. இந்த பிரச்சினை கோவில் திருவிழாவின் போது மோதலாக வெடித்தது. 

இரு தரப்பை சேர்ந்தவர்களும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். உருட்டுக் கட்டைகளாலும் சரமாரியாக தாக்கினர்.

இந்த மோதலில் சிவனேசன் (17), பிரதீப் (32) ஆகிய 2 இளைஞர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோதலில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ்கண்ணா தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார். 

கொலையுண்டவர்களில் ராஜேஷ்கண்ணாவும், பிரதீப்பும் அண்ணன்-தம்பிகள். இவர்களின் தந்தை சண்முகசுந்தரம் இந்த மோதலில் படுகாயத்துடன் உயிர்தப்பினார்.  அவரும் வீரபாகு, கபிலன், விமலேந்திரன் ஆகிய  3 பேரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
courtesyDailythanthi 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval