Tuesday, May 1, 2018

பெட்டிக் கடைக்காரரைத் தாக்கி ₹50,000 பறித்த போலீசார்

Image
ஆண்டிபட்டி அருகே லஞ்சம் தராத பெட்டிக் கடைக்காரரைத் தாக்கி விட்டு 50,000 ரூபாயை போலீஸ்காரர் பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேனி மாவட்டம் மறவபடியைச் சேர்ந்த பால்சாமி டாஸ்மாக் அருகே பெட்டிக் கடை வைத்திருக்கிறார். நேற்றிரவு கன்னியபிள்ளைபட்டி காவல்நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் லஞ்சம் கேட்ட போது பால்சாமி தர மறுத்திருக்கிறார்.

அதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் பால்ச்சாமியை கல்லால் தலையில் தாக்கியதோடு அவரிடமிருந்து 50,000 ரூபாயை பறித்துச் சென்றிருக்கின்றனர். படுகாயமடைந்த பால்சாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பால்சாமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் கூறுகிறது.  
Image

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval