
கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில் மூதாட்டி ஒருவர் சென்னை பெரவள்ளுரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைகள் செய்து அதில் வரும் வருமானம் கொண்டு வாழ்ந்து வந்த மூதாட்டி தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் சாப்பிடவும்¸ மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் மனவேதனையில் இருந்துள்ளார். 07.03.2019ம் தேதி விரக்தியடைந்த மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பெரவள்ளுர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.




