Tuesday, October 17, 2017

மனிதாபிமானம்

Image may contain: 1 person, outdoor
கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த மெடிக்கல் ஷாப்பில் வாய்ப்புண் என்று மாத்திரை கேட்டேன்.. வாயை திறக்க சொல்லி பார்த்துவிட்டு "இது சூட்டுக்கு வர சாதாரண புண்ணு.. அதுவா சரியாகிடும், மாத்திரை தேவையில்ல போங்க"ன்னு சொல்லி அனுப்பினார்.
சொன்னபடியே மறுநாள் குணமானது. அது சாதாரண உடல் சூடு என கண்டறிந்தது அவர் மருத்துவ அனுபவமாக இருக்கலாம். அதைவிட அவருக்கு அந்த மாத்திரை குறைந்தது 20ரூ வியாபாரம். ஆனாலும் அவர் என்னை ஏமாற்றி விற்காதது அவர் மனிதாபிமானம்..
மருத்தவராகி சேவை செய்வேன் என்று சொன்ன யாரும் இதுவரை செய்ததாக தகவல் இல்லை.. இவர் போல சிலர் மருத்துவர் ஆகாமலே சேவை செய்கிறார்கள்.. வாழ்க !
- பூபதி முருகேஷ் பதிவிலிருந்து...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval